தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கட்சியின் அறிவிப்பின்படி, 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து எஸ். வளர்மதி (முன்னாள் அமைச்சர், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்) இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ். வளர்மதி, திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் 2015 இடைத்தேர்தல் மற்றும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி இன்று தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அதிமுகவில் மேலும் சில மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.