எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களில் ஆட்சி கலைந்துவிடும், ஆறு மாதங்களில் கலைந்துவிடும் என சிலர் கூறுவதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், த.வெ.க. ஆட்சி ஐந்து ஆண்டுகள் நடைபெறும் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
சென்னை அருகே நடைபெற்ற தோழமை கட்சிகளின் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர், 'தவெக தற்போது வலிமையான கட்சியாக உள்ளது. மேலும் சில கட்சிகள் நம்முடன் கூட்டணிக்கு வர உள்ளன. பல ஆண்டுகளுக்கு இந்த கூட்டணி நிலைத்து நிற்கும்' என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், 'ஊழலற்ற, சமூக நீதி மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளை பின்பற்றும் ஆட்சியாக தவெக ஆட்சி இருக்கும். இதில் எந்த சமரசமும் இல்லை. தவெக தலைமையில் அமைய உள்ள கூட்டணிக்கு பெயர் உள்ளது. அடுத்த கூட்டத்தில் கூட்டணிக்கான பெயரை அறிவிப்பேன். தோழமை கட்சிகளை ஒருங்கிணைக்க ஒரு குழுவை உருவாக்க வேண்டும்' என்றும் வலியுறுத்தினார்.
மேலும், 'சமூக நீதி கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம். லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை நிச்சயம் கொடுப்போம்' என்று உறுதியளித்தார்.