த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜாவை வேறு கட்சிக்கு மாற்றுவதாக கூறி பேரம் பேசிய புகாரில், யூடியூபர் IPDS திருநாவுக்கரசு சென்னை காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினரான இளையராஜாவை, கட்சி மாறுமாறு கூறி மிரட்டல் விடுத்ததாகவும், அதற்காக பணம் பேரம் பேசியதாகவும் யூடியூபர் திருநாவுக்கரசு மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் முடிவில், யூடியூபர் IPDS திருநாவுக்கரசை இன்று (ஜூலை 1) காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.