மக்களே உஷார்! அடுத்ததாக உளுந்து விலையும் உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டில் நாடு முழுவதும் உளுந்து சாகுபடி பரப்பளவு கடந்த ஆண்டை விட 40% குறைந்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் சுமார் 28 லட்சம் டன்னாக இருந்த உளுந்து உற்பத்தி, இந்த ஆண்டு 22 லட்சம் டன்னாக சரிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக எல் நினோ தாக்கம் பார்க்கப்படுகிறது. இதனால் உளுந்து சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உளுந்து தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ ரூ.82 நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தூரில் உளுந்து கிலோ ரூ.92-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சாகுபடி பரப்பு குறைந்திருப்பதால், உளுந்து விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.
முன்னதாக, வறட்சி மற்றும் போதிய மழைப்பொழிவு இல்லாத காரணங்களால் அரிசி விலையும் அதிகரிக்கும் என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.