சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160-ம், கிராமுக்கு ரூ.270-ம் குறைந்து நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதல் அளித்தது. ஒரு சவரன் ரூ.1,04,240-க்கும், ஒரு கிராம் ரூ.13,030-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், இந்த விலை வீழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இன்று பிற்பகலில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.170 உயர்ந்து, ரூ.13,200-க்கு விற்பனையாகிறது.
இதேபோல், வெள்ளி விலையும் காலை நிலவரத்திலிருந்து உயர்ந்துள்ளது. காலையில் கிராமுக்கு ரூ.5 குறைந்த வெள்ளி, பிற்பகலில் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பிற்பகலில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்ட இந்த திடீர் உயர்வு, நகை வாங்க திட்டமிட்டிருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.