MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கிரிக்கெட் வீரர் ஷஷாங்க் சிங் மீது சமையல்காரர் புகார்: வழக்குப்பதிவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > கிரிக்கெட் வீரர் ஷஷாங்க் சிங் மீது சமையல்காரர் புகார்: வழக்குப்பதிவு
விளையாட்டு

கிரிக்கெட் வீரர் ஷஷாங்க் சிங் மீது சமையல்காரர் புகார்: வழக்குப்பதிவு

Admin
Last updated: June 30, 2026 3:03 pm
Admin
Share
SHARE

மும்பையில் பிரபல கிரிக்கெட் அணியான பஞ்சாப் கிங்ஸ்-ன் நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, சமையல்காரர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஷஷாங்க் சிங், அவரது தந்தை, சகோதரி மற்றும் ஓட்டுநர் ஆகியோர் தன்னை கொடூரமாகத் தாக்கியதாக சமையல்காரர் விபேந்திர சிங் தோமர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஷஷாங்க் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமையல்காரர் விபேந்திர சிங் தோமர் அளித்த புகாரில், நில்பாத் பகுதியில் உள்ள ஷைலேஷ் சிங்கின் பங்களாவில் மாதம் 15,000 ரூபாய் சம்பளம், இலவச தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்காலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் ஆசை காட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். வேலைப்பளு காரணமாக பணியை விட்டு விலக விரும்புவதாக தோமர் தெரிவித்தபோது, ஷஷாங்கின் தந்தை ஷைலேஷ் சிங் அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. 'நீ எதற்காக இங்கு வந்தாய்? என்னைக் கொலை செய்ய வந்தாயா? அல்லது திருட வந்தாயா? உன்னை விசாரிக்கும்படி செய்வேன். நீ குறைந்தது ஒரு மாதமாவது இங்கு வேலை செய்ய வேண்டும். உன்னை போன்ற பலரை நான் சுட்டுள்ளேன்' என்று ஷைலேஷ் சிங் மிரட்டியதாகவும், அவரது செல்போனையும் பிடுங்கி வைத்ததாகவும் தோமர் புகாரில் கூறியுள்ளார்.

தனது செல்போனைத் திரும்பப் பெறுவதற்காக தோமர் மேலும் இரண்டு நாட்கள் தொடர்ந்து வேலை செய்துள்ளார். ஆனால், போன் கிடைக்காததால் ஒரு அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு போனைத் திரும்பக் கேட்டுள்ளார். அப்போது, குடும்பத்தின் ஓட்டுநர் கதவை உடைக்க முயன்றுள்ளார். பின்னர் அங்கு வந்த கிரிக்கெட் வீரர் ஷஷாங்க் கதவைத் திறக்குமாறு கேட்டுள்ளார். கதவைத் திறந்தவுடன், ஓட்டுநரும் ஷஷாங்க் சிங்கும் சேர்ந்து தன்னை நாய் போல அடித்ததாகவும், ஷஷாங்கின் தந்தை மற்றும் சகோதரியும் அவர்களுடன் இணைந்து, தான் இறந்துவிடுவேன் என்று நினைக்கும் வரை தொடர்ந்து அடித்ததாகவும் விபேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய மருத்துவப் பரிசோதனையில் தோமரின் முகம் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டதற்கான தழும்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மூன்று நாட்கள் அங்கு சாப்பிட்ட உணவிற்கான தொகையைத் திருப்பித் தருமாறு அவர்கள் கேட்டதாகவும், இதனால் தனது மைத்துனர் அனுப்பிய 1,000 ரூபாயை அவர்களிடம் கொடுத்ததாகவும் தோமர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:IPLகிரிக்கெட்பஞ்சாப் கிங்ஸ்புகார்வழக்குஷஷாங்க் சிங்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுக ஆட்சியில் கமிஷன், கரப்ஷன்: வைகோ குற்றச்சாட்டு
Next Article துணை பொதுச்செயலாளர் பதவி ஏற்க மறுப்பு: வேலுமணி அறிவிப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திராவில் பழங்குடியினர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார் ஜனாதிபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விசாகப்பட்டினம் பழங்குடியினர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று…

June 30, 2026

ஏர் இந்தியா: டெல்லி-மெல்போர்ன் விமான சேவை நாளை முதல் தொடக்கம்

ஏர் இந்தியா, டெல்லி-மெல்போர்ன் இடையே மேம்படுத்தப்பட்ட Boeing…

June 30, 2026

பரீதாபாத் காவல் நிலையத்தில் இருந்து 32 துப்பாக்கிகள் காணாமல் போனது

பரீதாபாத் காவல் நிலையத்தில் இருந்து 32 உரிமம்…

June 30, 2026

நாளை முதல் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு இல்லை

மத்திய அரசு நாளை முதல் பெட்ரோல், டீசல்…

June 30, 2026

பாஸ்போர்ட் முதல் ஆதார் வரை கட்டணம் உயர்வு – நாளை முதல் அமல்!

நாளை முதல் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் சேவைகளுக்கான…

June 30, 2026

You Might Also Like

விளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அசத்திய மானவ் சுதர்: இங்கிலாந்து கவுண்டி அணியில் ஒப்பந்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல்-ரவுண்டர் மானவ் சுதர், இங்கிலாந்தின் வாரிக்ஷயர் கவுண்டி அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் சிறப்பான…

2 Min Read
விளையாட்டு

கால்பந்து போல தடுத்த ஆப்கான் வீரர்: குர்பாஸின் செயல் இணையத்தில் வைரல்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் ஒருநாள் போட்டியின் போது, ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் பந்தை கால்பந்து போல தடுத்த விசித்திரமான செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

யூடியூபர் முக்தார் மீது மேலும் 20 புகார்கள்; போலீஸ் நடவடிக்கை!

யூடியூபர் முக்தார் மீது மேலும் 20 புகார்கள் குவிந்துள்ளன. பாஜக பிரமுகர் அலிஷா அப்துல்லா அளித்த புகாரைத் தொடர்ந்து, முக்தார் அகமது கைது செய்யப்பட்டார். இவர் மீது…

2 Min Read
விளையாட்டு

தோல்விகளுக்கு தயாராகுங்கள்: வைபவ் சூர்யவன்ஷிக்கு பேடி அப்டன் அட்வைஸ்

15 வயது கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை தோல்விகளுக்குத் தயார் செய்ய வேண்டும் என மனநல பயிற்சியாளர் பேடி அப்டன் அறிவுறுத்தியுள்ளார். திடீர் புகழ் மற்றும் விமர்சனங்களை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?