MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்

இந்தியா

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்

Admin
Last updated: மே 9, 2026 3:26 மணி
Admin
Share
SHARE

புதுடெல்லி: முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக  லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வரும் ராஜா சுப்ரமணி, வரும் மே 30-ம் தேதி புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்பார். தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகான் ஓய்வு பெறும் நிலையில்  ராஜா சுப்ரமணி அந்த பதவியில் அமர உள்ளார்.

இந்திய ராணுவத்தின் துணை தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு, இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு எல்லைகளில் நிலவும் பாதுகாப்புச் சூழல்கள் குறித்து ஆழமான புரிதலும் அனுபவமும் உண்டு. ஏறக்குறைய 39 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய இவர், லக்னோவில் உள்ள மத்திய ராணுவ கட்டளையின் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார். 

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், வரும் மே 31-ஆம் தேதி பொறுப்பேற்பார். தற்போதைய தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதிக்கு பிறகு இவர் பொறுப்பேற்கவுள்ளார். 1987-ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்த இவர், தகவல் தொடர்பு மற்றும் மின்னணுப் போர் முறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பல், ஐஎன்எஸ் மைசூர் உள்ளிட்ட போர்க்கப்பல்களுக்குத் தலைமை தாங்கிய அனுபவம் இவருக்கு உண்டு.

Government of India appoints Lt Gen NS Raja Subramani PVSM, AVSM, SM, VSM (Retd.) as the next Chief of Defence Staff, who will also serve as Secretary, Department of Military Affairs. He will assume office after Gen Anil Chauhan completes his tenure on 30 May 2026.A highly… pic.twitter.com/wnbeitcpyX

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரு அதிகாரிகளுமே தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர்கள் ஆவர். லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி லண்டனின் கிங்ஸ் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டமும் பெற்றுள்ளார். அதேபோல், வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள உயரிய ராணுவக் கல்லூரிகளில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பாதுகாப்புத் துறையில் பல்வேறு மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த இரு அதிகாரிகளின் நியமனம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பயங்கரவாத ஆதரவு, பாலியல் வன்கொடுமை.. அமெரிக்காவில் இந்தியரின் குடியுரிமை அதிரடி ரத்து
Next Article திருச்சி-திருப்பதி ரெயிலுக்கு ஒப்புதல்: துரை வைகோ எம்.பி. வரவேற்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவர்களை தேடும் பணி

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும்…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550…

ஜூலை 5, 2026

You Might Also Like

இந்தியா

பாகிஸ்தான் வரலாறாகுமா? இந்திய ராணுவ தளபதியின் பகீர் எச்சரிக்கை!

இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி, பாகிஸ்தானுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். பயங்கரவாதத்தை நிறுத்தவில்லை என்றால், பாகிஸ்தான் வரலாறாக மாறிவிடும் என்று அவர் கூறியுள்ளார்.

1 Min Read
இந்தியா

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: கர்நாடகாவில் வாலிபர் கைது

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கர்நாடகாவில் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
இந்தியா

கிணற்றில் விழுந்த காட்டு யானையை மீட்ட வனத்துறையினர்

உணவு தேடி தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று, கிணற்றில் தவறி விழுந்த நிலையில், வனத்துறையினர் போராடி அதை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 Min Read
இந்தியா

சத்தீஸ்கர் பள்ளிகளில் காயத்ரி மந்திரம்: காங்கிரஸ் எதிர்ப்பு

சத்தீஸ்கர் பள்ளிகளில் காயத்ரி மந்திரம் கட்டாயமாக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது மதச்சார்பின்மைக்கு எதிரானது என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?