MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுகவில் பிளவா? கொடி, பேனர் இன்றி எஸ்.பி.வேலுமணி ரகசிய ஆலோசனை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > அதிமுகவில் பிளவா? கொடி, பேனர் இன்றி எஸ்.பி.வேலுமணி ரகசிய ஆலோசனை!
தமிழ்நாடு

அதிமுகவில் பிளவா? கொடி, பேனர் இன்றி எஸ்.பி.வேலுமணி ரகசிய ஆலோசனை!

Admin
Last updated: June 29, 2026 6:10 am
Admin
Share
SHARE

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளார். வழக்கமான அரசியல் கூட்டங்களைப் போலன்றி, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் கட்சி கொடியோ அல்லது பேனர்களோ பயன்படுத்தப்படவில்லை. மேடையில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. இக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட முக்கிய ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு சென்னையில் கடந்த 25 நாட்களாகத் தலைமைப் பொறுப்பில் நடந்த நகர்வுகள் குறித்து விரிவாக விளக்கினார். 'உங்களுக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் எப்போதும் நான்தான் முன்னால் வந்து நிற்பேன். இந்தச் சட்டப்பேரவை தேர்தலின் போது ஓ.பன்னீர்செல்வம் நம்முடன் இருந்திருந்தால் கட்சி இன்னும் பலமாக இருந்திருக்கும்' என்றும் அவர் குறிப்பிட்டார். திமுக விவகாரத்தில் கட்சியின் தலைமை எடுத்த சில முடிவுகள் குறித்தும் தனது கடுமையான அதிருப்தியை வேலுமணி வெளிப்படுத்தினார்.

'திமுகவுடன் கூட்டணி என்று சொன்னதால்தான் கட்சியில் பிரச்சினை உருவானது. எம்.ஜி.ஆர். அதிமுகவை ஆரம்பித்ததே திமுகவை எதிர்ப்பதற்குத்தான். அப்படி இருக்கும்போது, திமுகவுடன் அதிமுகவை சேர்ப்பது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? திமுகவுடன் யார் கைகோர்த்தாலும் அதை நாங்கள் ஏற்க மாட்டோம். கட்சியைச் சேர்ந்த 30 மாவட்ட செயலாளர்கள் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுகவை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் உங்களின் கருத்து என்னவோ, அதுதான் என் கருத்தும்' என வேலுமணி ஆவேசமாகப் பேசினார்.

மேலும் தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய அவர், 'தற்போது வாட்ஸ்அப்பில் குழுக்களை உருவாக்கி பலர் என்னை அவதூறாகப் பேசி வருகின்றனர். அதிமுகவிலிருந்து செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம், ஜே.சி.டி.பிரபாகர் என ஒவ்வொருவராக வெளியேறியது போல, நானும் கட்சியை விட்டு வெளியேறிவிடுவேன் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்றார். ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியே வந்த எஸ்.பி.வேலுமணியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், 'நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். இது மீட்டிங்கே கிடையாது. தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு நன்றி சொன்னோம். அவ்வளவுதான்' என்றார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKPoliticsஅதிமுகஅரசியல்எஸ்.பி.வேலுமணிகோவை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 29-06-2026 இன்றைய ராசி பலன்: நன்மைகள் உண்டு, கவனம் தேவை!
Next Article தவெக அமைச்சர் பதவி விலகக் கோரி திமுக மாணவரணி போராட்டம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம் நிரம்பி வருகிறது. மதுபான விற்பனையானது…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

நேபாளத்தில் தவித்த 52 இந்திய யாத்ரீகர்கள் மீட்பு

கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு சென்ற 52…

June 29, 2026

அயோத்தி ராமர் கோவில் வணிகமயம்: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

அயோத்தி ராமர் கோவில் ஆன்மிக மையமாக இருக்க…

June 29, 2026

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய…

June 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்: கனிமொழி கேள்வி

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டது குறித்து கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Min Read
தமிழ்நாடு

7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி சுமார் 5.8 கிமீ உயரம் வரை நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு…

1 Min Read
தமிழ்நாடு

தமிழக சட்டசபைக் கூட்டம் தொடக்கம்: ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகப் பொறுப்பேற்பு

தமிழக சட்டசபையின் 17-வது கூட்டம் தொடங்கிய நிலையில், ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகவும், ரவிசங்கர் துணை சபாநாயகராகவும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1 Min Read
தமிழ்நாடு

கட்சி நிதி கிடைக்கவில்லை எனில் அமைச்சரிடம் தெரிவிக்கலாம்: நிர்மல் குமார்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கட்சி நிதி கொடுத்துவிட்டு, பலன் கிடைக்காதவர்கள் அமைச்சரிடம் தெரிவிக்கலாம் என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். இது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?