சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளையும் உடனடியாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஈ.ஆர். ஈஸ்வரன்.
மேலும், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் உடனடியாகக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் பெட்ரோல், டீசல் விலைகள் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், ஒன்றிய அரசு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
விலை குறைப்பு குறித்த அரசின் அறிவிப்புக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.