MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் ஒரு முக்கிய மாற்றம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் ஒரு முக்கிய மாற்றம்!
தமிழ்நாடு

பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் ஒரு முக்கிய மாற்றம்!

Admin
Last updated: June 26, 2026 8:20 am
Admin
Share
SHARE

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) பங்குகளை 3 சதவீதம் வரை சலுகை விலையில் விற்பனை செய்ய இந்திய அரசு எடுத்த முடிவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், முதலமைச்சர் விஜய் 'இந்திய அரசு' என்ற பதத்தை பயன்படுத்தியுள்ளது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த மே 10ஆம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அன்றிலிருந்து, மத்திய அரசுக்கு பலவேறு விவகாரங்களில் முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதினார். குறிப்பாக, இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்பது, நீட் தேர்வை ரத்து செய்வது, பருத்தி இறக்குமதி வரியை நீக்குவது, பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்பப் பெறுவது, உரங்களை தட்டுப்பாடின்றி வழங்குவது, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பிரதமருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுவரை, இந்த அனைத்து கடிதங்களிலும் மத்திய அரசை, முதலமைச்சர் விஜய் 'ஒன்றிய அரசு' என்றே குறிப்பிட்டு வந்தார். 'ஒன்றிய அரசு' என்ற சொல் பயன்பாடு திமுகவினரால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த சொல்லுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், 'இந்திய ஒன்றியம்' என்பதை நினைவுப்படுத்தும் விதமாகவே ஒன்றிய அரசு என குறிப்பிடுவதாக திமுக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகும், மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே விஜய் குறிப்பிட்டு வந்தார்.

இந்நிலையில், என்எல்சி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் இன்று எழுதிய கடிதத்தில், 'தமிழ்நாடு அரசின் எண்ணங்களையும், கொள்கை ரீதியான ஆட்சேபனைகளையும் இந்திய அரசு உரிய முறையில் பரிசீலிக்கும் என்று தாம் உளப்பூர்வமாக நம்புகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். இது, ஒன்றிய அரசு என்பதை இந்திய அரசு என மாற்றி முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளதை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், 'மத்திய அரசுடன் மோதல் போக்கில் ஈடுபடமாட்டோம்' என முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், இன்றைய கடிதத்தில் பாஜகவினருக்கு விருப்பமில்லாத ஒன்றிய அரசு என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, இந்திய அரசு என முதலமைச்சர் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:இந்திய அரசுஎன்எல்சிதமிழ்நாடு அரசியல்பிரதமர் மோடிமுதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அவசர நிலை: ஜனநாயகம் நசுக்கப்பட்டது – மோடி குற்றச்சாட்டு
Next Article சென்னையில் இன்று மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

EPFO சேவைகள் மூன்று நாட்கள் நிறுத்தம்: முக்கிய தகவல்கள்!

வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது இணையதள சேவைகளை ஜூன் மாதத்தில்…

June 26, 2026

அவசர நிலை: ஜனநாயகம் நசுக்கப்பட்டது – மோடி குற்றச்சாட்டு

1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட…

June 26, 2026

பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: மத்திய அரசின் அறிவிப்பு

மத்திய அரசு பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஜூலை…

June 25, 2026

பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார் விகே பாண்டியனின் மனைவி சுஜாதா ராவத்

விகே பாண்டியனின் மனைவியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான…

June 25, 2026

பெங்களூரு கொலை: தாய், தந்தை, தங்கையை கொன்று தப்பிய பெண் புதுவையில் கைது

பெங்களூருவில் பெற்றோரையும் தங்கையையும் கொலை செய்துவிட்டு தப்பி…

June 25, 2026

You Might Also Like

அரசியல்

மேகேதாட்டு அணை திட்ட அறிக்கையை நிராகரிக்க மோடிக்கு முதல்வர் விஜய் கோரிக்கை

மேகேதாட்டு அணை திட்ட அறிக்கையை நிராகரிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் கர்நாடக அரசின் திட்டத்தை ஏற்கக்…

1 Min Read
தமிழ்நாடு

தி.மு.க ஆட்சியில் 12.6 லட்சம் கோடி முதலீடு: டி.ஆர்.பி. ராஜா பதில்

திமுக ஆட்சியில் 12.6 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். தவெக அரசின் குற்றச்சாட்டுகளை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

தமிழக முதல்வர் விஜய் இன்று கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்

தமிழக முதல்வர் விஜய் இன்று கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்கிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

1 Min Read
தமிழ்நாடு

விவாகரத்து வழக்குகளில் பெயர் வெளியிட தடை – ஐகோர்ட்டு உத்தரவு

விவாகரத்து வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது தனிப்பட்ட வாழ்க்கையின் அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?