MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அரசு ஊழியர்களே கவனம்: 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்து விவரங்கள் கட்டாயம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > அரசு ஊழியர்களே கவனம்: 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்து விவரங்கள் கட்டாயம்!
தமிழ்நாடு

அரசு ஊழியர்களே கவனம்: 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்து விவரங்கள் கட்டாயம்!

Admin
Last updated: June 25, 2026 7:04 pm
Admin
Share
SHARE

தமிழக அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. முதல் நியமனத்தின் மூன்று மாதங்களுக்குள் சொத்துகள், கடன்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜன் தலைமையிலான நிர்வாகச் சீர்திருத்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த விதிமுறை அமல்படுத்தப்படுகிறது. Tamil Nadu Government Servants' Conduct Rules, 1973 – Rule 7(3)-ன் கீழ், அரசு ஊழியர்கள் அசையும் மற்றும் அசையா சொத்துகள், கடன்கள், பொறுப்புகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் Schedule-I இல் உள்ள Form I முதல் Form V வரை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதோடு, ஊழலைத் தடுக்கவும், வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் குறித்த விசாரணைகளுக்கு உதவவும் முக்கியப் பங்காற்றுகிறது.

அனைத்து துறைச் செயலர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பிற அதிகாரிகள், தங்களுக்குக் கீழ் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களும் இந்த விதியைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். பெறப்படும் சொத்து அறிக்கைகள் முறையாக பரிசீலிக்கப்பட வேண்டும். ஏற்கனவே 07.06.2007 அன்று வெளியிடப்பட்ட அரசுக் கடிதத்தில் வழங்கப்பட்ட வழிமுறைகளையும் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை, அரசு ஊழியர்களிடையே வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதோடு, ஊழலைக் கட்டுப்படுத்தும் கண்காணிப்பு அமைப்பை வலுப்படுத்தவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் தொடர்பான புகார்களுக்கு அடிப்படை ஆதாரமாகவும் அமையும் என அரசு தெரிவித்துள்ளது. எனவே, அனைத்து அரசு ஊழியர்களும் இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு, உரிய காலக்கெடுவிற்குள் தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசு ஊழியர்கள்ஊழல் தடுப்புசொத்து விவரம்தமிழ்நாடு அரசுவெளிப்படைத்தன்மை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நலிவடைந்த துறையை காத்தவர் ஸ்டாலின்: செந்தில்பாலாஜி பேட்டி
Next Article திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் தவெகவினர் அட்டகாசம்: முதல்வர் விஜய் படம் வைக்க கோரிக்கை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: மத்திய அரசின் அறிவிப்பு

மத்திய அரசு பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்…

June 25, 2026

பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார் விகே பாண்டியனின் மனைவி சுஜாதா ராவத்

விகே பாண்டியனின் மனைவியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான…

June 25, 2026

பெங்களூரு கொலை: தாய், தந்தை, தங்கையை கொன்று தப்பிய பெண் புதுவையில் கைது

பெங்களூருவில் பெற்றோரையும் தங்கையையும் கொலை செய்துவிட்டு தப்பி…

June 25, 2026

கோவா: பாறையில் ரீல்ஸ் எடுத்த சுற்றுலா பயணி ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு

கோவா பகா கடற்கரையில் பாறைகளில் ரீல்ஸ் எடுத்த…

June 25, 2026

5 வயது சிறுமிக்கு பாலியல் துயரம்: சிறுவர்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு

சென்னையில் 5 வயது சிறுமிக்கு வயிறு வலிப்பதாக…

June 25, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஆம்பூரில் அதிர்ச்சி: நாய்க்கு வைத்த கோழி இறைச்சி சாப்பிட்ட குழந்தை உயிரிழப்பு!

ஆம்பூரில், நாய்க்கு வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சியை தவறுதலாக சாப்பிட்ட 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

இஸ்ரோ பெண் விஞ்ஞானிக்கு சர்வதேச அளவில் கவுரவம்

ஆமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை கடந்த 1947-ம் ஆண்டு விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நிறுவினார். இந்திய விண்வெளித் துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம், வானியல்,…

1 Min Read
தமிழ்நாடு

தமிழக அரசின் தீர்மானத்தை வரவேற்கிறோம் – சசிகலா

தமிழக அரசின் தனித் தீர்மானத்தை சசிகலா முழு மனதோடு வரவேற்பதாக அறிவித்துள்ளார். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

தங்க இறக்குமதி வரி உயர்வு: மத்திய அரசுக்கு செல்வபெருந்தகை கண்டனம்

தங்கம் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த திடீர் வரி உயர்விற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?