முதல்வர் விஜய் இன்று சென்னை கிளாம்பாக்கத்தில் 300 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள் கடந்த மூன்று நாட்களாக நிகழ்ச்சி நடைபெறாததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின்னர், முதலமைச்சர் விஜய் பெரம்பூர் செல்லும் 29A வழித்தட புதிய பேருந்தில் பயணம் செய்தார். அப்போது, அவரே சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் எடுத்ததுடன், நடத்துனரை அருகில் அமரச் சொல்லி அவருடன் உரையாடியபடி பயணித்தார். இதுகுறித்து பேருந்து நடத்துனர் கூறுகையில், 'பேருந்தில் செல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அது இன்று நனவாகியுள்ளது' என்று முதலமைச்சர் விஜய் கூறியதாக தெரிவித்தார். மேலும், 'முதலமைச்சர் சார் எங்க பஸ்ல வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நான் அவருக்கு நன்றி சொன்னேன்' என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். போக்குவரத்துத் துறையில் 12 ஆண்டுகளாகப் பணியாற்றி வருவதாகவும், முதல்வரே பேருந்தில் பயணித்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் நடத்துனர் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் உட்பட அனைவரும் டிக்கெட் எடுத்தனர்.
You Might Also Like
சினிமாவில் இருந்து வரவில்லை: முதலமைச்சர் விஜய் விளக்கம்
சினிமாவில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வரவில்லை என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் விளக்கினார். ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம் என பல போராட்டங்களுக்குப் பிறகே கட்சி ஆரம்பித்ததாக…
1 Min Read
19 மாவட்டங்களில் இன்று காலை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
1 Min Read
தொடர் மின்வெட்டு: முதல்வர் விஜய்யிடம் தமிழக பாஜக கேள்வி
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு குறித்து முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மின்வெட்டால் மக்கள் மற்றும் தொழில்கள் பாதிக்கப்படுவதாகவும்,…
2 Min Read
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற பணம் வைத்து விளையாடப்படும் விளையாட்டுகளை தடை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. 28% ஜி.எஸ்.டி. வரியும்…
1 Min Read