MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: வி.சி.க.வின் ஆதரவு யாருக்கு..? என்ன முடிவெடுக்க போகிறார் திருமாவளவன் – இன்று அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > வி.சி.க.வின் ஆதரவு யாருக்கு..? என்ன முடிவெடுக்க போகிறார் திருமாவளவன் – இன்று அறிவிப்பு
லைஃப் ஸ்டைல்

வி.சி.க.வின் ஆதரவு யாருக்கு..? என்ன முடிவெடுக்க போகிறார் திருமாவளவன் – இன்று அறிவிப்பு

Admin
Last updated: May 9, 2026 6:25 am
Admin
Share
SHARE

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில், திண்டிவனம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றது. தற்போது த.வெ.க. ஆட்சி அமைவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை விஜய் கோரினார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பெரும்பாலான நிர்வாகிகள் விஜய்க்கு நிபந்தனையுடன் ஆதரவு கொடுக்கலாம் என்று குரல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றுள்ளார். இதில் அவர் ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவே வாய்ப்பு அதிகமாக உள்ளது. அவ்வாறு ராஜினாமா செய்யும் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட வேண்டும். பின்னர், துணை முதல்-அமைச்சர் பதவி மற்றும் ஒரு அமைச்சர் பதவி ஆகியவற்றை வழங்கிட நிபந்தனை விதிக்க வேண்டும்.

சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக திருமாவளவன் இருக்கிறார். அவர் சட்டமன்றத் தேர்தலில் போடியிட்டு வெற்றி பெறும்போது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார். எனவே, வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் சிதம்பரம் தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வழங்கிட வேண்டும். த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்க இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தவெக ஆதரவு கேட்ட நிலையில், விசிக ஆதரவு கடிதம் வழங்காததால் ஆட்சியமைப்பதில் சிக்கல் நிலவி வரும்நிலையில், உயர்நிலை குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவிக்கிறார். திருமாவளவன் என்ன முடிவெடுக்க போகிறார் என்பது தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

இதற்கிடையே த.வெ.க.வுக்கு நிபந்தனையுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று (சனிக்கிழமை) ஆதரவு வழங்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. வன்னி அரசு நேற்று தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு. இது திருமா காலம்’ எனப் பதிவிட்டிருந்தார்.

த.வெ.க.வுக்கு நிபந்தனை விதித்துள்ள நிலையில், விஜய்யை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் கடுமையாக விமர்சித்து பதிவு வெளியிட்டிருந்தார்.

அதில், தேர்தலுக்கு பிந்தைய அசாதாரண சூழலை கையாளுவதில் த.வெ.க. தலைவர் விஜய் தடுமாறிப்போய் இருக்கிறாரா அல்லது அவருடன் இருக்கும் இரண்டாம் கட்டத்தலைவர்கள் அவரை தவறாக வழி நடத்துகிறார்களா? என கேள்வி எழுகிறது. ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மை தனக்கு கிடைக்காத சூழலில் மிக கவனமாக த.வெ.க. செயல்பட்டிருக்க வேண்டும். உடனே தான் ஆதரவு கோர விரும்பும் அரசியல் கட்சித்தலைவர்களை விஜய் நேரில் சந்தித்திருக்க வேண்டாமா?

இரண்டாம் கட்டத்தலைவர்களின் பிடியில் தான் இல்லை என்பதையும், கவர்னர் வழியாக பா.ஜனதா தமிழகத்திற்குள் நுழைய முயற்சிப்பதை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மனம்விட்டு கலந்துரையாடி இருக்க வேண்டாமா?

வாட்ஸ்-அப்பில் ஆதரவு கேட்டு கடிதத்தை அனுப்பிவிட்டு பதில் சொல்லுங்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது? வெற்றிபெற்ற பின் தேர்தலுக்கு முந்தைய முரண்பாடுகளை கூர் தீட்டாமல், அனைத்து தலைவர்களின் நன்மதிப்பை பெரும் வகையில் தி.மு.க.வை ஒழித்துக்கட்டப்பட்ட மன்னராட்சி என பேசிவிட்டு தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றிகண்டுள்ள இடதுசாரிகள் மற்றும் வி.சி.க.விடம் கூசாமல் ஆதரவு கேட்டு அழைப்பதில் என்னவகை தர்க்க நியாயம் உள்ளது.? என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: சிஎஸ்கே பிளே-ஆஃப் போவதில் என்ன பிரச்சனை? இன்னும் 4 போட்டிகளில் எத்தனை புள்ளிகள் தேவை?
Next Article சூப்பர் ரேபிட் செஸ்: குகேஷ் 4-வது இடம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன்…

June 25, 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…

June 25, 2026

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…

June 25, 2026

ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கு: மோடிக்கு அழைப்பா?

ஈரான் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி…

June 25, 2026

இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்

இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5…

June 24, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியது CPI: வீரபாண்டியன் அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக மூத்த தலைவர் வீரபாண்டியன் அறிவித்துள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தமிழகத்தில் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு: மக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை யூனிட்டுக்கு ரூ.500 வரை உயர்ந்துள்ளது. டீசல் விலை உயர்வு மற்றும் குவாரிகள் குறைப்பே காரணம் என…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

முதல்வர் விஜய்க்கு விஷால் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

நடிகர் விஷால், தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்து, மூன்று பெண்களின் கல்விச் செலவுகளுக்கான நிதியை முதல்வர் கையில் ஒப்படைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ரூ.10 லட்சத்திற்கு மேல் டெபாசிட்/பணம் எடுத்தால் வருமான வரித்துறைக்கு தகவல்!

ரூ.10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் அல்லது பணம் எடுத்தால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல். வரி ஏய்ப்பு தடுப்பதே நோக்கம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?