MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது: டி.ஆர்.பி. ராஜா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது: டி.ஆர்.பி. ராஜா
அரசியல்

முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது: டி.ஆர்.பி. ராஜா

Admin
Last updated: June 23, 2026 7:11 pm
Admin
Share
SHARE

முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது என்பதில் எங்கள் தலைவர் தலைமையிலான அரசும், அதில் அமைச்சராக இருந்த நானும் உறுதியாக இருந்தோம் என முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசு மாநிலத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: ‘த.வெ.க. அரசு பச்சையாகப் பொய் சொல்கிறது. தொழில் முதலீடுகள் என்றால் என்ன என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டு பேசலாம். தி.மு.க. ஆட்சி மீது பழிபோடுவதாக நினைத்து, மாநிலத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க த.வெ.க. அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால் தொழில் துறையினர் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர். முந்தைய ஆட்சிக் காலத்தில் ரூ.3 லட்சம் கோடி முதலீடுகள் மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒரு சிறுபிள்ளைத்தனமான, பொருளாதாரம் மற்றும் தொழில் முதலீடு ஊக்குவிப்பு குறித்த அடிப்படைப் புரிதல் இல்லாத பச்சைப் பொய். செமிகண்டக்டர் நிறுவன முதலீடுகள் தமிழ்நாட்டிலிருந்து பறிக்கப்பட்டவை என்பதை முன்னாள் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார மேடையிலேயே பகிரங்கமாகக் குற்றச்சாட்டாக வைத்தார்.’

மேலும் அவர், ‘டொயோட்டா வாகனத் துறை நிறுவனம் ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்துள்ளது. ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலீடு செய்யும் தங்களது இறுதி முடிவை தற்போதைய தவெக ஆட்சி அமைந்த பிறகுதான் அறிவித்துள்ளது. என்னால் இவர்கள் சொல்லும் எல்லா பொய்களுக்கும் புள்ளிவிவரங்களோடு பதில் அளிக்க முடியும். முதலீட்டு ஊக்குவிப்பைச் சுற்றியுள்ள அற்ப அரசியல் தாக்குதல்கள் மாநிலத்திற்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். எனது பதவிக் காலம் முழுவதும் முதலீடுகள் தொடர்பாக பல தரப்பிலிருந்தும் விமர்சனங்களை எதிர்கொண்டேன். ஆனால் எந்த முதலீட்டாளரையும் சிரமமான நிலைக்குத் தள்ளாதிருப்பதில் எப்போதும் கவனமாக இருந்தேன். நேற்று முதல், பல தொழில் துறையினர் எனக்கு தொலைபேசி மூலமாகப் பேசி, இந்த புதிய அரசின் பிரதிநிதிகள் விமர்சனங்களை கையாளும் விதமும், பொதுவெளியில் சேறு வாரி இறைக்கும் விதமும் குறித்து அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். உலகளாவிய முதலீட்டாளர்களின் முன்னிலையில் தமிழ்நாடு அவமானப்படுத்தப்படுகிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.

‘மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாநிலத்தை விட்டு முதலீடுகள் வெளியேறுவது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், முதலீடுகள் வெளியேறாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை விளக்க வேண்டியதே புதிய அரசின் கடமை. அதற்கு பதிலாக, முந்தைய அரசின் கடின உழைப்பின் மீது தங்களது பெயர் ஒட்டும் செயலில் அவர்கள் ஈடுபடக் கூடாது. 12.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு மூலமாக 30 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவானது மாண்புமிகு திராவிட நாயகர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்பது உலகம் அறிந்த உண்மை. இந்தியாவில் மற்ற மாநிலங்களில் பல இதர காரணங்களினால் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் லிஸ்டை வைத்துக்கொண்டு 3 லட்சம் கோடி இழப்பு என்பது பொய்யான குற்றச்சாட்டு. முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 3 லட்சம் கோடிக்கும் குறைவாகவே முதலீடுகள் வந்துள்ள நிலையில் எங்கள் ஆட்சிக் காலத்தில் ரூ.12.6 லட்சம் கோடி முதலீட்டு உறுதிமொழிகளையும், 36 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. இது 2016-21 காலகட்டத்தைவிட 5 மடங்காகும். திராவிடர் மாடல் அரசு தொடர்ந்திருந்தால் இம்முறை குறைந்தபட்சம் 25 லட்சம் கோடி முதலீடு வந்திருக்கும். இன்று இந்த அரசு சிறுபிள்ளைத்தனமான பேச்சுகளை குறைத்து தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் இந்த சாதனையை திராணியிருந்தால் முறியடித்து காட்டட்டும் பார்போம்.’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்டிஆர்பி ராஜாதமிழ்நாடு அரசுதிமுகமுதலீடுகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் முதல்வராவதை ஆதரித்தீர்களா? நயினார் நாகேந்திரன் கேள்வி
Next Article திருமணத்திற்கு முன்பே கொடூரம்: காதலனுடன் சேர்ந்து தொழிலதிபரை கொன்ற வருங்கால மனைவி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழகத்திற்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

ஜூன், ஜூலை மாதங்களுக்குத் தேவையான 40 டிஎம்சி காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக…

June 23, 2026

பெங்களூருவில் மதுபோதை மாணவர்கள் கொடூரம்: விடுதி உரிமையாளர் மட்டையால் அடித்துக் கொலை

பெங்களூரு கஸ்தூரி நகரில், மதுபோதையில் விடுதிக்குள் நுழைந்த…

June 23, 2026

பெங்களூரில் பயங்கரம்: காதல் ஜோடி கொடூரம் – பெற்றோர், சகோதரி கொலை

பெங்களூரில் காதல் ஜோடி ஒன்று, தங்கள் காதலை…

June 23, 2026

சின்னத்திரை நடிகை என கூறி பணம் பறித்த பெண் பெங்களூருவில் கைது

பெங்களூருவில், சின்னத்திரை நடிகை என கூறி சமூக…

June 23, 2026

டெல்லியில் 11 வயது சிறுமி கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை: கார் டிரைவர் கைது

டெல்லியில் சாலையோரம் உறங்கிய 11 வயது சிறுமியை…

June 23, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

நடிகர் தாடி பாலாஜி திடீர் விலகல்: அரசியல் பயணத்தில் அடுத்த கட்டம் என்ன?

நடிகர் தாடி பாலாஜி, லட்சிய ஜனநாயக கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார். பொறுப்புகள் வழங்கப்படாததால் விரக்தியில் விலகியதாக கூறப்படுகிறது. அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து இதுவரை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

50 லட்சம் பேர் இணைந்தால் அடுத்தகட்டம் – அண்ணாமலை அறிவிப்பு!

புதிய அரசியல் இயக்கம் 'வீ த லீடர்ஸ்' குறித்து அண்ணாமலை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 50 லட்சம் பேர் இணைந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேசுவோம் என…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்: இபிஎஸ் ஷாக்!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

1 Min Read
அரசியல்

கோவை: சர்வதேச தரத்தில் விளையாட்டு அரங்குகள் திறப்பு!

கோவை மாநகரில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு வரும் உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கங்களின் பணிகள் விரைவில் நிறைவடையவுள்ளன. மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?