MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது: டி.ஆர்.பி. ராஜா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது: டி.ஆர்.பி. ராஜா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது: டி.ஆர்.பி. ராஜா

அரசியல்

முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது: டி.ஆர்.பி. ராஜா

Admin
Last updated: ஜூன் 23, 2026 7:11 மணி
Admin
Share
SHARE

முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது என்பதில் எங்கள் தலைவர் தலைமையிலான அரசும், அதில் அமைச்சராக இருந்த நானும் உறுதியாக இருந்தோம் என முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசு மாநிலத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: ‘த.வெ.க. அரசு பச்சையாகப் பொய் சொல்கிறது. தொழில் முதலீடுகள் என்றால் என்ன என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டு பேசலாம். தி.மு.க. ஆட்சி மீது பழிபோடுவதாக நினைத்து, மாநிலத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க த.வெ.க. அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால் தொழில் துறையினர் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர். முந்தைய ஆட்சிக் காலத்தில் ரூ.3 லட்சம் கோடி முதலீடுகள் மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒரு சிறுபிள்ளைத்தனமான, பொருளாதாரம் மற்றும் தொழில் முதலீடு ஊக்குவிப்பு குறித்த அடிப்படைப் புரிதல் இல்லாத பச்சைப் பொய். செமிகண்டக்டர் நிறுவன முதலீடுகள் தமிழ்நாட்டிலிருந்து பறிக்கப்பட்டவை என்பதை முன்னாள் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார மேடையிலேயே பகிரங்கமாகக் குற்றச்சாட்டாக வைத்தார்.’

மேலும் அவர், ‘டொயோட்டா வாகனத் துறை நிறுவனம் ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்துள்ளது. ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலீடு செய்யும் தங்களது இறுதி முடிவை தற்போதைய தவெக ஆட்சி அமைந்த பிறகுதான் அறிவித்துள்ளது. என்னால் இவர்கள் சொல்லும் எல்லா பொய்களுக்கும் புள்ளிவிவரங்களோடு பதில் அளிக்க முடியும். முதலீட்டு ஊக்குவிப்பைச் சுற்றியுள்ள அற்ப அரசியல் தாக்குதல்கள் மாநிலத்திற்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். எனது பதவிக் காலம் முழுவதும் முதலீடுகள் தொடர்பாக பல தரப்பிலிருந்தும் விமர்சனங்களை எதிர்கொண்டேன். ஆனால் எந்த முதலீட்டாளரையும் சிரமமான நிலைக்குத் தள்ளாதிருப்பதில் எப்போதும் கவனமாக இருந்தேன். நேற்று முதல், பல தொழில் துறையினர் எனக்கு தொலைபேசி மூலமாகப் பேசி, இந்த புதிய அரசின் பிரதிநிதிகள் விமர்சனங்களை கையாளும் விதமும், பொதுவெளியில் சேறு வாரி இறைக்கும் விதமும் குறித்து அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். உலகளாவிய முதலீட்டாளர்களின் முன்னிலையில் தமிழ்நாடு அவமானப்படுத்தப்படுகிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.

‘மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாநிலத்தை விட்டு முதலீடுகள் வெளியேறுவது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், முதலீடுகள் வெளியேறாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை விளக்க வேண்டியதே புதிய அரசின் கடமை. அதற்கு பதிலாக, முந்தைய அரசின் கடின உழைப்பின் மீது தங்களது பெயர் ஒட்டும் செயலில் அவர்கள் ஈடுபடக் கூடாது. 12.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு மூலமாக 30 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவானது மாண்புமிகு திராவிட நாயகர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்பது உலகம் அறிந்த உண்மை. இந்தியாவில் மற்ற மாநிலங்களில் பல இதர காரணங்களினால் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் லிஸ்டை வைத்துக்கொண்டு 3 லட்சம் கோடி இழப்பு என்பது பொய்யான குற்றச்சாட்டு. முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 3 லட்சம் கோடிக்கும் குறைவாகவே முதலீடுகள் வந்துள்ள நிலையில் எங்கள் ஆட்சிக் காலத்தில் ரூ.12.6 லட்சம் கோடி முதலீட்டு உறுதிமொழிகளையும், 36 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. இது 2016-21 காலகட்டத்தைவிட 5 மடங்காகும். திராவிடர் மாடல் அரசு தொடர்ந்திருந்தால் இம்முறை குறைந்தபட்சம் 25 லட்சம் கோடி முதலீடு வந்திருக்கும். இன்று இந்த அரசு சிறுபிள்ளைத்தனமான பேச்சுகளை குறைத்து தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் இந்த சாதனையை திராணியிருந்தால் முறியடித்து காட்டட்டும் பார்போம்.’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்டிஆர்பி ராஜாதமிழ்நாடு அரசுதிமுகமுதலீடுகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் முதல்வராவதை ஆதரித்தீர்களா? நயினார் நாகேந்திரன் கேள்வி
Next Article திருமணத்திற்கு முன்பே கொடூரம்: காதலனுடன் சேர்ந்து தொழிலதிபரை கொன்ற வருங்கால மனைவி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மஹுவா மொய்த்ரா

மஹுவா மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

விசாரணைக்கு காணொலி வாயிலாக ஆஜராக அனுமதி கோரி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா…

ஆகஸ்ட் 8, 2026

ஜந்தர் மந்தர்: போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு – உயர் நீதிமன்றம் கேள்வி

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி…

ஆகஸ்ட் 8, 2026

கைத்தறி தினத்தையும் கொண்டாடுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

இளைஞர்கள் நட்பு தினத்தை கொண்டாடிய அதே உற்சாகத்துடன்,…

ஆகஸ்ட் 8, 2026

ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்துக்கு உமர் அப்துல்லா வரவேற்பு

இந்தியாவில் இளைஞர்கள் போராடுவது தேசத்திற்கு எதிரானது அல்ல…

ஆகஸ்ட் 8, 2026

அமித் ஷா பெயரை கேட்டாலே தீவிரவாதிகள் நடுங்குவர்: கிரண் ரிஜிஜு

மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, 'இந்தியாவின்…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

அரசியல்

திமுக கூட்டணியில் இருந்து ஐ.யூ.எம்.எல். விலகல்: முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டத்தில்…

2 Min Read
இந்தியா

அமித் ஷா மூளையாக செயல்பட்டார்: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது காங்கிரஸ் கண்டனம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களின் சட்டவிரோத பிரிவுக்கு மூளையாக செயல்பட்டது அமித் ஷா தான் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. NDA பெரும்பான்மையை அதிகரிக்க இந்த நடவடிக்கை…

1 Min Read
தமிழ்நாடு

கட்சிக்காக எந்த தியாகத்திற்கும் தயார் – ஈ.பி.எஸ்.

அதிமுகவில் உட்கட்சி பூசல் வலுத்து வரும் நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இண்டியா கூட்டணியில் காங்கிரசுக்கு விசிக எதிர்ப்பு: திருமாவளவன் கருத்து

இண்டியா கூட்டணி கூட்டத்தில் காங்கிரசின் அணுகுமுறை குறித்து விசிக தலைவர் திருமாவளவன் அதிருப்தி தெரிவித்துள்ளார். மாநில கட்சிகளை காங்கிரஸ் பலவீனப்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?