MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இறால் தொழிற்சாலையில் அம்மோனியா கசிவு: 3 பேருக்கு 15 நாள் காவல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > இறால் தொழிற்சாலையில் அம்மோனியா கசிவு: 3 பேருக்கு 15 நாள் காவல்
லைஃப் ஸ்டைல்

இறால் தொழிற்சாலையில் அம்மோனியா கசிவு: 3 பேருக்கு 15 நாள் காவல்

Admin
Last updated: June 23, 2026 7:35 am
Admin
Share
SHARE

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கண்ணிகைபேர் கிராமத்தில் உள்ள 'செயின்ட் பீட்டர் அண்டு பால் சீஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற இறால் ஏற்றுமதி தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இந்த துயர சம்பவத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மதியம் ஏற்பட்ட இந்த வாயு கசிவின் காரணமாக, தொழிற்சாலை வளாகத்தில் தங்கியிருந்த 74 தொழிலாளர்கள் (70 பெண்கள், 4 ஆண்கள்) பாதிக்கப்பட்டனர். அவர்கள் திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று காலை ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கொள்கலனை முறையாகப் பராமரிக்காததாலும், தொழிற்சாலைக்கு உள்ளேயே தொழிலாளர்களைத் தங்கவைத்து உயிரிழப்பு மற்றும் காயங்களுக்குக் காரணமான உரிமையாளர், மனிதவள மேலாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

இதனையடுத்து, பெரியபாளையம் போலீசார் தொழிற்சாலை உரிமையாளர்களான ஜோசப் மோகன் (59), ஜோசப் ஜெகன் (49) மற்றும் மேலாளர் டேனியல் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில், மூவரும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Ammonia Gas Leakஅம்மோனியா வாயு கசிவுஇறால் தொழிற்சாலைதிருவள்ளூர்நீதிமன்ற காவல்விபத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிளாஸ்டிக் பாட்டில் வேண்டாம்: தமிழிசை சவுந்தரராஜன் பகிரும் ராஜ்பவன் ரகசியம்!
Next Article சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தொடர்கிறார்: தோனியின் பரிந்துரை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா: ஜனாதிபதி ஏற்பு

மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிந்த…

June 24, 2026

மும்பையில் ரெட் அலர்ட்: கனமழை எச்சரிக்கை

மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய…

June 24, 2026

செருப்பால் தாக்கப்பட்ட சிறுவர்கள்: பள்ளி மைதானத்தில் கொடூரம்

பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய சிறுவனை கட்டிவைத்து…

June 24, 2026

முதல்-மந்திரி பதவி எனக்கு வழங்கப்பட்டது – டி.கே.சிவக்குமார்

கட்சி மேலிடம் தனக்கு முதல்-மந்திரி பதவியை வழங்கியதாகவும்,…

June 24, 2026

ஜார்கண்ட் டி20 இறுதிப் போட்டி: கூட்ட நெரிசலில் திருட்டு, காயமடைந்தோர்

ஜார்கண்ட் டி20 லீக் இறுதிப் போட்டியில் கூட்ட…

June 24, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

அஜித் சம்பளம் குறைகிறதா? கோலிவுட்டில் பரபரப்பு!

நடிகர் அஜித் குமார் தனது சம்பளத்தைக் குறைக்கிறாரா என்ற செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை சிவாவுடன் மீண்டும் இணைவது குறித்த யூகங்களும் வலுத்துள்ளன.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ரிஷபம் ராசி: இன்று சுகங்கள் கூடும் நாள்!

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ஜூன் 11, 2026 அன்று சோகங்கள் நீங்கி சுகங்கள் பெருகும். தொழிலில் உறவினர்களின் ஆதரவு, உத்தியோகத்தில் முயற்சிகள் வெற்றி பெறும். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மகப்பேறு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: தமிழகம் முழுவதும் போராட்டம்

மதுரை, சிவகாசி சம்பவங்களை கண்டித்து மகப்பேறு மருத்துவர்கள் வேலைநிறுத்தம். அரசு மருத்துவர்கள் ஜூன் 26 அன்று OP சேவையை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். சுமார் 4,500 மருத்துவர்கள் பங்கேற்க…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

திருப்பதியில் 3 கி.மீ. வரிசை: பக்தர்களுக்கு தேவஸ்தானம் வழங்கும் வசதிகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக பக்தர்கள் 3 கி.மீ. தூரம் வரை வரிசையில் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு உணவு, டீ, காபி, பால், குடிநீர் போன்ற அத்தியாவசியப்…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?