MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: புதுச்சேரியில் மும்மொழி கொள்கை! – அதிமுகவின் நிலைப்பாடு என்ன? – செயலாளர் அன்பழகன் விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > புதுச்சேரியில் மும்மொழி கொள்கை! – அதிமுகவின் நிலைப்பாடு என்ன? – செயலாளர் அன்பழகன் விளக்கம்
இந்தியா

புதுச்சேரியில் மும்மொழி கொள்கை! – அதிமுகவின் நிலைப்பாடு என்ன? – செயலாளர் அன்பழகன் விளக்கம்

Admin
Last updated: May 8, 2026 11:28 am
Admin
Share
SHARE

புதுச்சேரியில் மும்மொழி கொள்கை! – அதிமுகவின் நிலைப்பாடு என்ன? – செயலாளர் அன்பழகன் விளக்கம்

  • Published by:

Last Updated:Apr 27, 2026 3:19 PM IST

புதுச்சேரியில் மும்மொழி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதிமுக செயலாளர் அன்பழகன், இந்த விவகாரத்தில் அக்கட்சியின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

News18
News18

புதுச்சேரியில் மும்மொழி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார் அக்கட்சியின் புதுச்சேரி செயலாளர் அன்பழகன்.இந்தியா முழுவதும் புதிய தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை, இடைநிலை கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ-யின் கீழ் வரும் பள்ளிகள் அனைத்தும் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய மொழிக் கொள்கை தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் சிபிஎஸ்இ நிர்வாகம் அனுப்பியுள்ளது.அதில், பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு மாணவர்களிடையே மொழித் திறன், கலாசார புரிதல் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் இரண்டு உள்ளூர் இந்திய மொழிகளைக் கற்பிக்க பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.advertisementஇதன்படி, 2026-27 கல்வி ஆண்டு முதல் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படுவதாகவும், 3 மொழிகளில் இரு மொழிகள் கட்டாயம் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளும் 7 நாட்களுக்குள் 3வது இந்திய மொழி கற்பிப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ-யின் இந்த உத்தரவு, புதுச்சேரி மாணவர்களிடையே குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களிடையே பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.ஏனென்றால், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத்தும் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டன. புதுச்சேரி மாணவர்கள் தற்போது பெரும்பாலும் ஆங்கில வழியில் கற்கும் நிலையில், பிரெஞ்சு மற்றும் இந்தியை கூடுதலாக கற்று வருகின்றனர்.advertisementபுதிய மொழி கொள்கையின்படி ஒரு வெளிநாட்டு மொழிதான் கற்க வேண்டும் என்பதால், ஆங்கிலம் தவிர்த்து பிரெஞ்சு மொழியை கற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் வெளிப்படுத்தியுள்ளார்.செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்த விவகாரத்தில் அரசு சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். மும்மொழி கொள்கை விவகாரத்தில் சீரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். மத்திய அரசு சொல்லிவிட்டது என்பதால் உடனடியாக அதனை செயல்படுத்த வேண்டும் என்பதில்லை. மாணவர்கள் பாதிப்படையாத வண்ணம் செயல்பட வேண்டும். அதிமுகவை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கைதான். முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கொள்கை முடிவின்படி புதுச்சேரியில் மும்மொழி கொள்கை என்பது அவசியமற்றது. இரு மொழிக் கொள்கை மட்டுமே தேவையானது” இவ்வாறு தெரிவித்தார்.Click here to add News18 as your preferred news source on Google. கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.Location :Puducherry (Pondicherry)First Published :Apr 27, 2026 3:19 PM IST//புதுச்சேரியில் மும்மொழி கொள்கை! – அதிமுகவின் நிலைப்பாடு என்ன? – செயலாளர் அன்பழகன் விளக்கம்

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article Kerala Assembly Election 2026 | கேரளாவில் அரியணை யாருக்கு? – 1 சதவீதத்திற்கும் குறைவான வித்தியாசம்… முந்தைய தேர்தல் கணக்கு!
Next Article பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மியின் எம்.பி.க்கள்! அரவிந்த் கெஜ்ரீவாலுக்கு அதிர்ச்சி கொடுத்த 6 முக்கிய தலைவர்கள்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

5 நாடுகளுக்கு பிரதமர் மோடி: முக்கிய பயண திட்டம் வெளியானது!

பிரதமர் நரேந்திர மோடி, மே 15 முதல் 20 வரை ஐக்கிய அரபு…

May 15, 2026

நீட் தேர்வு இனி ஆன்லைனில்! மத்திய அமைச்சர் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்பிற்கான நீட்…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ராகுல் காந்தி கண்டனம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ராகுல்…

May 15, 2026

நீட் தேர்வு இனி கணினி வழித் தேர்வு: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

நீட் தேர்வு இனி கணினி வழித் தேர்வாக…

May 15, 2026

எஸ்ஐஆர் பணிகள்: 19 மாநிலங்களில் விரைவில் தொடக்கம்!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப்…

May 15, 2026

You Might Also Like

இந்தியா

சுவேந்து அதிகாரி உதவியாளர் கொலை..3 பேர் கைது!

முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் உதவியாளரான சந்திரநாத் ரத் கொலை தொடர்பாக, மேற்கு வங்க காவல்துறை திங்களன்று பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களைக்…

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு ரத்து: முதல்வர் ஸ்டாலினின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டிய ராஜ் தாக்கரே!

மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலான…

2 Min Read
இந்தியா

ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து

புதுடெல்லி: ரயி​ல் பயணத்துக்காகக் காத்​திருப்பு பட்​டியலில் இருந்து பயணம் செய்ய முடி​யாதவர்​களின் எண்​ணிக்கை 3.39 கோடியை எட்​டி​யுள்​ளது. ரயி​லில் பயணம் செய்ய முடி​யாமல், கடந்​தாண்​டில் டிக்​கெட் ரத்த

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு ரத்து: தவிப்பில் மாணவர்கள்; தீர்வு என்ன?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் ரத்து செய்யப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதோடு, தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்…

5 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?