தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நியமிக்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சிறப்பு பிரதிநிதியின் முக்கியப் பணி, டெல்லியில் இருந்துகொண்டு தமிழக அரசின் முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் எடுத்துச் செல்வதாகும். மேலும், மாநிலத்திற்கான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசிடமிருந்து முறைப்படி பெற்றுத் தருவதும் இவரது முதன்மையான பொறுப்பாகும்.
டெல்லி அரசியலிலும் மத்திய தலைவர்களிடமும் நீண்ட அனுபவம் கொண்ட வைகோவின் இந்த நியமனம், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவில் ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது. இது இரு அரசுகளுக்கும் இடையே சுமூகமான உறவை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நியமனம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைகோவின் அனுபவம் தமிழக நலன்களுக்குப் பெரிதும் உதவும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.