சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த இயற்கை வைத்திய முறைகளை பலர் பின்பற்றி வருகின்றனர். ஆங்கில மருந்துகளை நாடும் நிலையில், வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய வைத்திய முறைகள் உள்ளன. அவற்றை பின்பற்றுவதன் மூலம் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க முடியும்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த ஒரு எளிய வழி, வெந்தயத்தை பயன்படுத்துவதாகும். இரவு தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலை அந்த தண்ணீரை வடிகட்டி குடிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் சர்க்கரை அளவு குறையும். மற்றொரு முறை, ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, ஆறிய பிறகு அந்த தண்ணீரை குடிப்பதாகும்.
மேலும், வெண்டைக்காய் மூளையின் செயல்திறனை அதிகரிக்கவும், ஞாபகசக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வெண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும். வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பான பகுதி சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த துணைபுரிகிறது.
வெண்டைக்காயை பயன்படுத்தி சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் தண்ணீரில் மூன்று அல்லது நான்கு வெண்டைக்காய்களை சிறு துண்டுகளாக வெட்டிப் போட வேண்டும். மறுநாள் காலையில் அந்த வெண்டைக்காய்களை நன்கு பிழிந்துவிட்டு, தண்ணீரை குடித்து வந்தால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்.