இந்தோனேசியாவில் இன்று (செவ்வாய் கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதைத் தொடர்ந்து 5.2 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும், தொடர்ந்து பின் அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, மத்திய சுலவேசி மாகாணத்தின் தலைநகரான பாலுவிலிருந்து 46 கிலோமீட்டர் தொலைவில், கிழக்கு-தென்கிழக்கு திசையில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்துள்ளது. நில அதிர்வு ஒரு நிமிடத்திற்கும் மேலாக நீடித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், சேத மதிப்பீட்டுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மேலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவசரகால குழுக்கள் தீவிர எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் ஒரு பகுதியை உலுக்கியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. தொடர்ந்து பின் அதிர்வுகள் பதிவாகி வருவதால், மீட்புப் பணிகள் மற்றும் மீட்புக் குழுக்களின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.