ஐரோப்பிய நாடுகளுக்கான பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, ஸ்லோவாக்கியாவின் பிரடிஸ்லாவா நகருக்கு அவர் சென்றடைந்தார். இந்திய பிரதமர் ஒருவர் ஸ்லோவாக்கியா செல்வது இதுவே முதல் முறையாகும். அங்கு அந்நாட்டு பிரதமர் ராபர்ட் பிகோவுடன் பிரதமர் மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கிடையேயான உறவை விரிவான கூட்டாண்மை என்ற நிலைக்கு உயர்த்துவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது, இந்தியா மற்றும் ஸ்லோவாக்கியா இடையே மொத்தம் 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இது இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் உயரிய விருது வழங்கி அந்நாட்டு அரசு கவுரவித்துள்ளது. பிரடிஸ்லாவாவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஸ்லோவாக்கிய அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார்.
இந்த விருது, வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளால் பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 33-வது சர்வதேச விருதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவின் சர்வதேச அங்கீகாரத்தை மேலும் உயர்த்தியுள்ளது.