இந்திய விமான நிலையங்களில் Assistant (Security) பணிக்கான 62 காலியிடங்களை AAICLAS நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அரசு வேலை தேடுவோருக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். திருப்பதி, திருச்சி, மதுரை, புவனேஸ்வர், உதய்பூர் ஆகிய விமான நிலையங்களில் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 27 வரை இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. விண்ணப்ப கட்டணமாக SC/ST/Female/EWS பிரிவினருக்கு ரூ.100/- மற்றவர்களுக்கு ரூ.500/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Assistant (Security) பணிக்கான சம்பளம் முதல் வருடம் ரூ.21,500/- ஆகவும், இரண்டாம் வருடம் ரூ.22,000/- ஆகவும், மூன்றாம் வருடம் ரூ.22,500/- ஆகவும் வழங்கப்படும். திருப்பதி விமான நிலையத்தில் 09 காலிப்பணியிடங்களும், திருச்சி விமான நிலையத்தில் 23 காலிப்பணியிடங்களும், மதுரை விமான நிலையத்தில் 09 காலிப்பணியிடங்களும், புவனேஸ்வர் விமான நிலையத்தில் 09 காலிப்பணியிடங்களும், உதய்பூர் விமான நிலையத்தில் 12 காலிப்பணியிடங்களும் உள்ளன.
விண்ணப்பிக்க விரும்புவோர் AAICLAS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.aaiclas.aero/career இல், 'Advertisement No.2 of 2026 for Assistant (Security)' என்ற அறிவிப்பை தேர்வு செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 11.06.2026 மற்றும் கடைசி தேதி 02.07.2026 ஆகும். விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்கள் மற்றும் புகைப்படத்தை பதிவேற்றி, விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.