அதிமுகவில் இருந்து கட்சியினர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'தேர்தல் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க மறுக்கிறார். அதிமுக பொதுக்குழுவை கூட்ட இபிஎஸ் தயங்குகிறார். பொதுக்குழு கூட்ட முடியாவிட்டால் செயற்குழுவையாவது கூட்ட வேண்டும். ஜெயலலிதா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றார். உண்மை நிலையை இபிஎஸ் உணர வேண்டும். அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்'
மேலும் அவர் கூறுகையில், 'அதிமுக வென்ற 47 தொகுதிகளில் 30 தொகுதிகள் பாமக தயவால் வென்றவை. தொடர்ச்சியாக அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைகிறது. வாக்கு சதவீதமும் சரிந்து வருகிறது. யாருடைய கருத்தையும், ஆலோசனையையும் கேட்காமல் பழனிசாமி செயல்படுகிறார். தேர்தலுக்கு தேர்தல் அதிமுகவின் நன்மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. கூட்டணியில் பாமக இல்லையென்றால் பழனிசாமியே தட்டுத்தடுமாறிதான் வென்றிருப்பார். அதிமுகவில் நடந்த தவறுகள் அனைத்தும் சரி செய்யப்பட வேண்டும்' என தெரிவித்தார்.