திருவள்ளூரில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.30 கோடி மோசடி செய்த அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலில் முதலீடு செய்த பணத்திற்கு இருமடங்கு லாபம் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளனர். முதல் முறை முதலீடு செய்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணத்தை திரும்ப வழங்கியதால், சகோதரர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
பின்னர், அதிகளவில் பணம் முதலீடு செய்ய வைத்த பிறகு, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட பலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.