பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், ராப் பாடகர் வேடனை சந்தித்ததற்கு பின்னணி பாடகி சின்மயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசு போன்றே தவெக-வும் பாலியல் குற்றவாளிக்கு அடைக்களம் கொடுக்கிறதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், ராப் பாடகர் வேடனை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாடகி சின்மயி, 'திமுக அரசு பாலியல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது' என குற்றம் சாட்டினார். மேலும், 'தவெக-வும் இதே பாதையில் செல்கிறதா?' என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாடகி சின்மயி மேலும் கூறுகையில், 'வேடன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவரை அமைச்சர் ராஜ்மோகன் சந்தித்தது அதிர்ச்சியளிக்கிறது' என்று தெரிவித்துள்ளார். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.