திமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்தார்.
தற்போதைய அரசியல் சூழலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் தொடர்ந்து பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முடிவை இதைவிட அழுத்தமாக சொல்ல முடியாது என அவர் தெரிவித்தார்.
மேலும், ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நாட்டின் நலனுக்காக பயணிக்க விரும்புவதாகவும் அவர் விளக்கமளித்தார். இது ஒரு முக்கிய அரசியல் நகர்வாக கருதப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.