சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பட தொடங்கிவிட்டது என்றும், அனைத்து மாவட்டங்களிலும் இந்த படைகள் பணிகளை தொடங்கி உள்ளன என்றும் சிறப்பு அதிரடிப்படை ஐஜி பவானீஸ்வரி தெரிவித்துள்ளார். தற்போது 70 படைகள் இயங்க ஆரம்பித்துள்ளன. சென்னையில் ஒவ்வொரு துணை கமிஷனரிடமும் இரண்டு படைகள் உள்ளன. ஆவடி, தாம்பரத்தில் நான்கு படைகள் உள்ளன. இந்த படைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 270 படைகள் இயங்கும்.
தனித்துவமாக இயங்க சிறப்பு கண்ட்ரோல் ரூம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கண்காணிப்பு அதிகரிக்கப்படும். சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் ஐஜி பவானீஸ்வரி குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட எந்த பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்றும், குற்றங்களைத் தடுப்பதே முதல் முன்னுரிமை என்றும் அவர் கூறியுள்ளார்.
100, 112, 1091 ஆகிய தொலைபேசி எண்கள் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்காக செயல்பாட்டில் உள்ளன. 49 ட்ரோன்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவை வாங்கப்பட்டு, அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படும். இரவு நேரங்களில் செல்ல முடியாத இடங்களுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படும். மப்டியிலும் நாங்கள் கண்காணிப்போம் என ஐஜி பவானீஸ்வரி உறுதியளித்துள்ளார்.