நார்வே செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இளம் இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்' என்று கூறியுள்ளார்.
சிறு வயதிலேயே செஸ் விளையாட்டில் சிறந்து விளங்கி வரும் பிரக்ஞானந்தா, சர்வதேச அளவில் பல போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்து வருகிறார்.
அவரது இந்த வெற்றி, பல இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.