MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 மாதங்களில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 மாதங்களில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு
தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 மாதங்களில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு

Admin
Last updated: May 28, 2026 8:09 am
Admin
Share
SHARE

ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த 26 வயது இளம்பெண்ணை, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள் சுந்தர் மற்றும் சுரேஷ் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கக் கோரி, பாதிக்கப்பட்ட இளம்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், பாலியல் வன்கொடுமை வழக்குகளை சட்டப்படி 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க மாநிலம் முழுவதும் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றங்களுக்கும், செஷன்ஸ் நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள பாலியல் வன்கொடுமை வழக்குகள் குறித்த விவரங்களை போலீஸ் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும், தனது வழக்கையும் திருவண்ணாமலை நீதிமன்றம் விரைவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு துரித நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பாலியல் வழக்குகளில் விரைந்து நீதி வழங்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், மரபணு சோதனை மற்றும் தடயவியல் ஆய்வகங்களை அதிகளவில் அமைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் கோரினார்.

போலீஸ் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், சம்பந்தப்பட்ட காவலர்கள் இருவரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை வரும் ஜூன் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், திருவண்ணாமலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மாதங்கள் ஆகியும் விசாரணை துரிதப்படுத்தப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். மேலும், இந்த பாலியல் வழக்கை திருவண்ணாமலை நீதிமன்றம் தினசரி அடிப்படையில் விசாரித்து, வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Naduகாவலர்கள்சென்னை ஐகோர்ட்திருவண்ணாமலைபாலியல் வன்கொடுமைவழக்கு விசாரணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முன்னாள் தலைவர் ரந்தீர் சிங் மறைவு
Next Article ஐபிஎல் 2026: தோல்விக்கு பின் கம்மின்ஸ் பேச்சு – வைபவ் சூர்யவன்ஷியைப் பாராட்டிய ஹைதராபாத் கேப்டன்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மெஜாரிட்டியை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவி ஏற்கிறார்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத்…

1 Min Read
தமிழ்நாடு

திமுக திட்டங்கள் தொடரும்: உதயநிதி ஸ்டாலின் பதிலடி

தமிழக சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக திட்டங்கள் தொடரும் என முதலமைச்சரே கூறியது தமது வெற்றி என்றார்.

1 Min Read
தமிழ்நாடு

கோவை சிறுமி வழக்கு: கைதான இருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கோவை சூலூரில் 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், கைதான இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை…

1 Min Read
அரசியல்

சிபிஎஸ்இ 3-வது மொழி அறிவிப்புக்கு அண்ணாமலை கடும் எதிர்ப்பு

சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகளைக் கட்டாயமாக்கிய புதிய அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். பெற்றோர்களுக்கு…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?