மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று திடீர் மழை பெய்தது. இந்த மழையின் போது, அப்பகுதியில் உள்ள பருத்தி தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்த தொழிலாளர்கள் சிலர், மழையில் இருந்து தப்பிக்க அருகிலிருந்த மரத்தின் கீழ் ஒதுங்கினர்.
துரதிர்ஷ்டவசமாக, அப்போது மின்னல் தாக்கி அந்த மரம் எரிந்து சேதமடைந்தது. மரத்தின் அருகே நின்றுகொண்டிருந்த கூலித் தொழிலாளர்கள் 3 பேர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் பெயர்கள் ராமுத்தாய், தனிக்கொடி, மற்றும் கணபதி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த மின்னல் தாக்குதலில் வாசியம்மாள் என்ற பெண் படுகாயமடைந்துள்ளார். அவரை உடனடியாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்த வாசியம்மாள் விரைவில் குணமடையவும் அப்பகுதி மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இது போன்ற மின்னல் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.