MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தி.நகர் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் என்.ஆனந்த் அதிகாரிகளுடன் ஆலோசனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தி.நகர் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் என்.ஆனந்த் அதிகாரிகளுடன் ஆலோசனை

தமிழ்நாடு

தி.நகர் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் என்.ஆனந்த் அதிகாரிகளுடன் ஆலோசனை

Admin
Last updated: மே 26, 2026 9:37 மணி
Admin
Share
SHARE

சென்னை, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும், தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினருமான என். ஆனந்த், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஒரு முக்கிய கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில், தியாகராய நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவல்துறை, மின்சாரத்துறை, சென்னை மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பிற அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முக்கிய நோக்கம், தியாகராய நகர் தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் அங்கு நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிப்பதாகும். அமைச்சர் என். ஆனந்த், அதிகாரிகளுக்கு பல்வேறு முக்கிய அறிவுரைகளையும் வழங்கினார். பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தொகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும், இரவு நேரங்களிலும் வெளிச்சம் தரும் வகையில் தெரு விளக்குகள் அமைக்கப்பட வேண்டும் என்றும், தியாகராய நகர் பகுதி இருள் இல்லாத பகுதியாக மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பெண்களின் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும், கஞ்சா போன்ற போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்தும், டாஸ்மாக் கடைகள் சரியான நேரத்தில் மூடப்படுவதை உறுதி செய்வது குறித்தும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலைக் குறைத்து போக்குவரத்தைச் சீரமைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். மக்களின் அத்தியாவசியத் தேவைகளான மின்சாரம், தண்ணீர், மருத்துவம் போன்றவற்றை எந்தப் பிரச்சனையும் இன்றி மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும், தெரு நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் காவல்துறை துணை ஆணையாளர் V.R. சீனிவாசன், சிவில் சப்ளை உதவி ஆணையாளர் அபிநயா, வட்டாட்சியர் D. வாணி, மின்துறை செயற்பொறியாளர் ஏ. வெங்கடேசன், பெருநகர சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் எம். கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:TNagar Developmentஅமைச்சர் என். ஆனந்த்சென்னைதமிழ்நாடுதியாகராய நகர்வளர்ச்சிப் பணிகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதர்வா நடிப்பில் ‘இதயம் முரளி’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Next Article ஐபிஎல் 2026: ரபாடா படைத்த மாபெரும் உலக சாதனை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருமாவளவன் உடனடியாக த.வெ.க-விற்கு ஆதரவு அளிக்க வேண்டும்..!- ராமதாஸ் வலியுறுத்தல்

தம்பி திருமாவளவன் உடனடியாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

2 Min Read
குட்கா முறைகேடு வழக்கு தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவு
தமிழ்நாடு

குட்கா வழக்கு: சி.விஜயபாஸ்கர் மீதான விசாரணையை 12 வாரங்களில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கில் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான விசாரணையை 12 வாரங்களுக்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

717 மதுபானக் கடைகள் மூடல்: வரவேற்பு தெரிவித்த மு. வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வரவேற்கத்தக்கது என்றும், முழு மதுவிலக்கு மற்றும் பணியாளர் பாதுகாப்புக்கு அரசு…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

திமுக தோல்விக்கான காரணங்கள்: கள ஆய்வாளர் எழிலரசன் அறிக்கை

ஈரோடு, நாமக்கல் மாவட்ட தேர்தல் கள ஆய்வாளர் எழிலரசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்த அறிக்கையில், கடைசி 4 நாட்களில் தேர்தல் பிரச்சாரம் மாறியதும், கூட்டணி கட்சிகளின்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?