MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மின்வெட்டு புகார்: மின்துறை அமைச்சர் குற்றச்சாட்டுக்கு தொ.மு.ச. மறுப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மின்வெட்டு புகார்: மின்துறை அமைச்சர் குற்றச்சாட்டுக்கு தொ.மு.ச. மறுப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மின்வெட்டு புகார்: மின்துறை அமைச்சர் குற்றச்சாட்டுக்கு தொ.மு.ச. மறுப்பு

தமிழ்நாடு

மின்வெட்டு புகார்: மின்துறை அமைச்சர் குற்றச்சாட்டுக்கு தொ.மு.ச. மறுப்பு

Admin
Last updated: மே 26, 2026 8:08 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாடு மின்சார வாரிய தொ.மு.ச. பொதுச்செயலாளர் பா.மணிமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகால கழக ஆட்சியில் மின்சார வாரியத்திற்கு பல நன்மைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சியின் கீழ், சுமார் 3 கோடியே 36 லட்சத்து 55 ஆயிரம் நுகர்வோர்களின் உச்சபட்ச மின் தேவையாக 27,307 மெகாவாட் மின்சாரத்தை எவ்வித தடையும் இன்றி வழங்கி, தமிழ்நாட்டு மக்களின் மின்தேவையை முழுமையாக பூர்த்தி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகால தி.மு.கழக ஆட்சியில், தேவைக்கேற்ப துணைமின்நிலையங்கள் அதிகரிக்கப்பட்டும், மின்விநியோகக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டும், புதிய மின்மாற்றிகள் மற்றும் HT, LT லைன்கள் நிறுவப்பட்டும் மின்நுகர்வோருக்கு எவ்வித இடர்பாடுகளும் ஏற்படாதவாறு சிறந்த நிர்வாகத் திறமையுடன் கையாளப்பட்டதே தடையில்லா மின்சாரம் வழங்க காரணமென அவர் கூறியுள்ளார். மேலும், 2021-ல் 'மின்னகம்' என்ற பிரிவை ஏற்படுத்தி, பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்து, புதிய மின்இணைப்பு, பெயர்மாற்றம் போன்ற சேவைகளை சிறப்பாக வழங்கியதை, ஏதோ இந்த அரசு வந்த பிறகுதான் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டது போல ஒரு அமைச்சர் பேசுவது வடிகட்டிய பொய் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தற்போதைய சூழலில், கடந்த 29.04.2026 அன்று தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவை 21,307 மெகாவாட் ஆகவும், உச்சபட்ச மின் நுகர்வு 471.456 மில்லியன் யூனிட் ஆகவும் பதிவாகியுள்ளது. கடந்த 4 நாட்களாக வெயிலின் தாக்கம் 108 டிகிரி வரை இருந்ததால் மின் நுகர்வு உயர்ந்து, மின்விநியோகத்தில் கடும் இடர்பாடுகள் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வீதிக்கு வந்து கண்டனங்களை தெரிவித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் இதுபோன்று மின்விநியோகத்தில் இடர்பாடுகள் ஏற்படும்போது, அனைத்து மின்தொழிற்சங்க நிர்வாகிகளையும் கலந்து ஆலோசித்து தீர்வு காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோடை காலத்தில் தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை எங்கிருந்து பெறுவது என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகளுடனும், தொழிற்சங்கங்களுடனும் விவாதித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய மின்சாரத்துறை அமைச்சர், கடந்த கால தி.மு.க ஆட்சியின் மீது பழிபோட்டு தப்பிக்க முயற்சிப்பதாக பா.மணிமாறன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஏற்பட போகும் கூடுதல் மின் தேவைக்காக எவ்வித முன்நடவடிக்கை எடுக்காமல், துறைரீதியாக போதுமான புரிதல் பெறாத அமைச்சரின் கீழ் இயங்கும் மின்வாரியம் இவ்வளவு மோசமாக முன்னெப்போதும் இருந்ததில்லை என்றும், இந்த மின்வெட்டு அமைச்சரின் தகுதியின்மையை காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தி.மு.க ஆட்சியின் மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டு, இனிமேலாவது துறைரீதியாக அதிகாரிகளுடனும், தொழிற்சங்கங்களுடனும் ஆய்வுக் கூட்டம் நடத்தி, விவாதித்து மின் தட்டுப்பாட்டை நீக்கி மக்களை காப்பாற்ற இந்த அரசு முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:power cutTamil Nadu Electricity Boardதமிழ்நாடு மின்சார வாரியம்தி.மு.கதொ.மு.ச.மின்துறை அமைச்சர்மின்வெட்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெக ஆட்சி திமுகவின் நீட்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
Next Article 13 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆர்எஸ்எஸ் இளைஞர் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெறும் இடம்

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) தீவிரமாக ஈடுபட்டுள்ளது.…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை கைதி சஜ்ஜன் குமார் மரணம்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை…

ஆகஸ்ட் 20, 2026

வந்தே மாதரம்: காங்கிரஸை தாக்கிய அமித் ஷா

மாமல்லபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர்…

ஆகஸ்ட் 20, 2026

3 நாட்கள் மேற்கு வங்கம் செல்கிறார் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்று…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தமிழ்நாடு

விஜய் முதலமைச்சர் ஆவதா? அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி

முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நடிகர் விஜய் குறித்து ஒருமையில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. விஜய் முதலமைச்சர் ஆனால் தமிழ்நாடு என்னவாகும் என கேள்வி…

2 Min Read
சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு
தமிழ்நாடு

லஞ்சம் வேண்டாம்: பார் உரிமையாளர்கள் மத்தியில் காவல் ஆணையர் அமல்ராஜ் பேச்சு

சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ், நட்சத்திர விடுதிகள் மற்றும் பார்களின் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை என்றும், கேட்டால் புகார் அளிக்கலாம் என்றும்…

2 Min Read
வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவிக்கும் புகைப்படம்
தமிழ்நாடு

பட்டமளிப்பு விழாவில் பெற்றோர்கள் மண் தரையில் அமர்ந்தது கண்டனத்திற்குரியது – வானதி சீனிவாசன்

பட்டமளிப்பு விழாவில் பெற்றோர்கள் மண் தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது என்றும், இது நிர்வாகத் தோல்விக்குச் சான்று என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தங்கம் விலை உயர்வு குறித்த செய்தி
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு அதிரடி உயர்வு: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இன்று (ஜூலை 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.13,350-க்கு விற்பனையாகிறது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?