கோவையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமாகாவில் இணைவது கட்சியின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என்றும், இதற்கு தமாகா தலைமை ஊக்கமளிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
குன்னத்தில் நடைபெற்ற சம்பவம் மிகுந்த கவலையளிப்பதாகவும், சமூக ஊடகங்களில் பரவும் அவதூறுகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என தனது கட்சி தொண்டர்களை கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார். திமுகவினரும் அங்கு கூடியதால் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்ததாகவும், இனி அவ்வாறு நடக்க இடம் கொடுக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதிமுக எம்எல்ஏக்கள் விலகி தமாகாவில் இணைவதை ஆரோக்கியமான அரசியல் என கருதவில்லை என்றும், குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காகவே திமுகவிற்கு ஆதரவளித்ததாகவும் திருமாவளவன் குறிப்பிட்டார். தமாகாவின் அழைப்பை ஏற்று அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளதாகவும், எந்த சூழலிலும் திமுக ஆட்சியை கவிழ்க்க இடம் கொடுக்க மாட்டோம் என்றும் அவர் உறுதியளித்தார். தமாகா தலைமை இதுபோன்ற விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காத வகையில் செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்பே அதிமுக இது போன்ற நெருக்கடியை சந்திக்கும் என கணித்திருந்ததாகவும், பாஜக கூட்டணியில் இருந்ததால் அதிமுக ஆதரவை பெறுவதில் தமாகாவிற்கு நெருடல் இருந்ததாகவும் அவர் கூறினார். பாஜக கூட்டணி இல்லாமல் அதிமுக இருந்திருந்தால், தமாகா அவர்களின் ஆதரவை நாடியிருக்கும் என்றும், எனவேதான் அதிமுக இந்த நெருக்கடி நிலையை சந்திப்பதாகவும் அவர் விளக்கினார். தமிழக அரசியலில் தலித்களுக்கு அதிக இடம் கொடுத்திருப்பது இதுவே முதன் முறை என்றும், அந்த சமூகத்திற்கு அங்கீகாரம் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.