MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தவெகவில் இணைந்த எம்எல்ஏக்கள்: பழனிசாமிக்கு தவெக பதிலடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - அரசியல் - தவெகவில் இணைந்த எம்எல்ஏக்கள்: பழனிசாமிக்கு தவெக பதிலடி

அரசியல்

தவெகவில் இணைந்த எம்எல்ஏக்கள்: பழனிசாமிக்கு தவெக பதிலடி

Admin
Last updated: மே 26, 2026 5:31 மணி
Admin
Share
SHARE

தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு தவெக பதிலடி கொடுத்துள்ளது. 'உங்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை. தொடர் தோல்விகளை சந்திக்கும் தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் எங்களிடம் வந்துள்ளனர்' என தவெக தெரிவித்துள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, 'கீழ்தளத்தில் ராஜினாமா, மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு என்றும் தமிழ்நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை தவெக அறிமுகப்படுத்தியுள்ளது' என காட்டமாக விமர்சித்திருந்தார்.

தவெக ஐடி விங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம்தான் கொடுக்க முடியும் என்பதை அறியாத ஒருவர், பல முறை ஆட்சி செய்த கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதை எண்ணி தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய சட்டப்பேரவை செயலகத்துக்குத்தான் வர வேண்டும். இதுதான் ஜனநாயகம் வகுத்த வழிமுறை. இந்த அடிப்படை தெரியாமல் உளற வேண்டாம். தொடர் தோல்விகளால் புலம்பாதீர்கள். சரிந்து வரும் உங்கள் அரசியல் சாம்ராஜ்ஜியத்தை எங்களின் மீது பழிபோட்டு காப்பாற்ற முடியாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'ஒரு பலவீனமான தலைமை, தன் தோல்வியை மறைப்பதற்காக அரசு மீதும் நமது கட்சியின் மீதும் பழி போடுகிறது. உங்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஒரு தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது தலைவரின் ஆற்றலை மதித்து, மக்கள் சேவை செய்ய அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வந்து இணைந்துள்ளனர். சாதாரண கட்சி மாறுபவர்கள் பதவியைக் காப்பாற்றப் பார்ப்பார்கள். ஆனால், இங்கு அவர்கள் பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, மக்களின் மறுதேர்தலைச் சந்திக்கத் தயாராக வந்துள்ளனர். கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை இந்த நாடே அறியும். அன்று சொகுசு விடுதியில் அடைத்து வைத்து, பதவிகளைக் காப்பாற்ற நடத்தப்பட்ட நாடகங்களை மக்கள் மறக்கவில்லை. ஆனால் இன்று, தார்மிகப் பொறுப்பேற்று, தங்களின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்துவிட்டு, மக்கள் மன்றத்தை மீண்டும் சந்திக்கத் துணிவோடு வந்துள்ளார்கள். தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள். இப்போது உங்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களே உங்களை நிராகரித்து வருகிறார்கள். எங்களின் கவனம் முழுவதும் மக்கள் மேம்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கியே உள்ளது' என்றும் தவெக தெரிவித்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MLA ResignationTamil Nadu Politicsஅதிமுகஅரசியல்தவெக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கருத்து மோதலே ஜனநாயகத்துக்கு அரண் – ஆ.ராசா
Next Article 3 நாள் பயணமாக சிக்கிம் சென்றடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் கனமழையால் இடிந்து விழுந்த குடியிருப்பு கட்டிடம்

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழந்தனர்.…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா: பரபரப்பு

அதிமுகவில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், இதுவரை ராஜினாமா செய்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

விஜய் முதலமைச்சர் ஆனது நல்லது: ஆர்.ஜே. பாலாஜி பாராட்டு

நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, மாசாணி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். 'கருப்பு' திரைப்பட வெற்றி குறித்தும், விஜய் முதலமைச்சர் ஆனது அனைத்து துறைகளுக்கும் நல்லது…

1 Min Read
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன்
தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன் விலகல்!

கூடலூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன், அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். விரைவில் தவ.மு.க-வில் இணைய உள்ளதாகத் தகவல்.

1 Min Read
அரசியல்

அழகர்கோவில்: சமத்துவ மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

அழகர்கோவிலில் உள்ள நாகினி கண்மாயில் நடைபெற்ற சமத்துவ மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று உற்சாகமாக மீன்பிடித்தனர்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?