MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி: தமிழகம் ரத்தக்காடாக மாறுவது பற்றி பேசுவாரா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி: தமிழகம் ரத்தக்காடாக மாறுவது பற்றி பேசுவாரா?
அரசியல்

முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி: தமிழகம் ரத்தக்காடாக மாறுவது பற்றி பேசுவாரா?

Admin
Last updated: May 25, 2026 4:34 pm
Admin
Share
SHARE

முதல்வர் கோட்டைக்கு வந்து கேரியரில் மதிய உணவு சாப்பிடுவதை ஒரு பெரிய மாற்றமாக இவர்கள் சித்தரிக்கும் வேளையில், தமிழ்நாடு ரத்தக்காடாக மாறி வருவதைப் பற்றியும், தங்கள் கட்சியினர் பொறுப்பின்றி அதிகார வெறியாட்டம் போடுவதைப் பற்றியும் முதல்வர் விஜய் ஒரு வார்த்தையாவது பேசுவாரா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை கீழமாத்தூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கைது, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை, தாம்பரம் அருகே கல்லூரி மாணவியை தவறாகப் பார்த்த தவெக நிர்வாகி கைது, திருவொற்றியூரில் மின்துறை உதவிப் பொறியாளர் வீட்டிற்குச் சென்று அச்சுறுத்திய தவெகவினர் என தொடரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சேலம் ஓமலூரில் மழைநீர் தேங்கிய ரயில்வே சுரங்கப்பாதையில் காரில் சென்ற கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசு உடனடியாக மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் இந்த துயரம் நிகழ்ந்ததாக அவர் குற்றம்சாட்டினார். சிறப்பான ஆட்சியைத் தருவேன், மாற்றம் கொண்டு வருவேன் என முதல்வர் கூறிய நிலையில், ஒவ்வொரு நாளும் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்து கொண்டிருப்பதாகவும், இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியால் ஏமாற்றமே மிஞ்சுவதாகவும் அவர் விமர்சித்தார்.

ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு மதுரை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகவும், அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் போக்கு தொடர்வதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார். முந்தைய ஆட்சிபோல் இந்த ஆட்சியிலும் பல்வேறு சம்பவங்களுக்குப் பதில் சொல்லாமல், செய்தியாளர் சந்திப்பு நடத்த முடியாத முதல்வராக முதல்வர் விஜய் இருக்கிறார் என்றும், ட்விட்டர் மடைமாற்று அரசியலில் திமுக ஈடுபட்டது போல, இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியலில் இன்றைய ஆளுங்கட்சி ஈடுபடுவதாகவும் அவர் சாடினார். தமிழக மக்கள் மீது அக்கறை இருந்தால், சட்டம்-ஒழுங்கை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரை அவர் வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:ADMKஅதிமுகஎடப்பாடி பழனிசாமிசட்டம் ஒழுங்குதமிழ்நாடு அரசியல்முதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து கனிமொழி எம்.பி கேள்வி
Next Article தமிழக அரசியலில் பரபரப்பு: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா, த.வெ.க.வில் இணைப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஆட்சி மாறினாலும் ஆபத்து தொடர்கிறது: எடப்பாடி ஆவேசம்!

சென்னை முடிச்சூர் அருகே நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தை குறிப்பிட்டு, ஆட்சி மாறினாலும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

திமுக கூட்டணியில் தொடர்கிறோம் – திருமாவளவன் விளக்கம்!

திமுக, அதிமுக அணிகள் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி நடந்தது உண்மைதான் என்றும், ஆனால் அதை தான் விரும்பவில்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க…

1 Min Read
தமிழ்நாடு

காவிரி மக்களின் உயிர்நாடி: மாணிக்கம் தாகூர் கண்டனம்

தமிழக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை விரிவாக்க முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிரானது என்றும், காவிரி மக்களின்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?