மதுரை பரவை அருகே கீழமாத்தூர் காலனியில் வசிக்கும் உத்தமன் மகன் கண்ணன் (வயது 21) என்பவர், பெயிண்டராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று நள்ளிரவில், அவர் ஒரு வீட்டுக்குள் நுழைந்து, அங்கு உறங்கிக் கொண்டிருந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
திடீரென நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தமாக கூச்சலிட்டுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர் உடனடியாக ஓடி வந்துள்ளனர். இதற்கிடையில், கண்ணன் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார்.
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதாமணி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கண்ணனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கண்ணன், த.வெ.க. பிரமுகர் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.