மேற்கு வங்காளத்தில் பால்டா தொகுதியில் நடைபெற்ற மறுதேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் நடைபெற்ற முந்தைய தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து மறுதேர்தல் நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் தேபாங்சு பண்டா, சி.பி.ஐ. (எம்) வேட்பாளர் சம்பு நாத் குர்மியை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 21 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி வாகை சூடியுள்ளார்.
முன்னதாக, மேற்கு வங்காளத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, ஏப்ரல் 23 அன்று முதல் கட்ட தேர்தலும், ஏப்ரல் 29 அன்று இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இரண்டாம் கட்ட தேர்தலின் போது பால்டா தொகுதியில் நடைபெற்ற தேர்தலின்போது முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த முறைகேடு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பால்டா தொகுதிக்கு மட்டும் மறுதேர்தல் நடத்தப்பட்டது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் தேபாங்சு பண்டா பெரும் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம், பா.ஜ.க.வின் மொத்த வெற்றி தொகுதிகளின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.
இந்த மறுதேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜகாங்கீர் கான் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார். பா.ஜ.க.வின் இந்த வெற்றி, அம்மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.