MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கோவை சிறுமி கொலை: ரூ.1 கோடி நிவாரணம் வழங்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - கோவை சிறுமி கொலை: ரூ.1 கோடி நிவாரணம் வழங்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

அரசியல்

கோவை சிறுமி கொலை: ரூ.1 கோடி நிவாரணம் வழங்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

Admin
Last updated: மே 24, 2026 8:26 மணி
Admin
Share
SHARE

கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சூலூர் அருகே நடந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் ஏற்கனவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது சொந்த ஊரான மேட்டூர் அருகே கொளத்தூர் உக்கம்பருத்தி காடு கிராமத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், '10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நல்ல ஆட்சி அமையும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், தொடர்ந்து அதே நிலைமை நீடிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை காட்டுகிறது. இந்த சம்பவத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்' என பாஜக சார்பில் கேட்டுக்கொண்டார். திமுக ஆட்சியில் நடந்த சம்பவங்கள் தொடர்வதாகவும், இதற்கு முதல்வர் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தங்களை மாநில அரசு உடனடியாக கொண்டு வந்து, இரண்டு மாதங்களுக்குள் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், 'நாடாளுமன்றத்தில் பாரதிய நியாய சங்கீத் (பிஎன்எஸ்) என்ற பெயரில் பழைய ஐபிசி சட்டத்தில் மாற்றங்கள் செய்து, கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், முந்தைய தமிழ்நாடு அரசு ஆங்கிலேயர் காலத்து சட்டத்தையே நடைமுறையில் வைத்துள்ளது. அமித் ஷா கொண்டு வந்த பிஎன்எஸ் சட்டத்தில் கடுமையான தண்டனைகள் உள்ளன. இதை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை' என்றார். இதற்கிடையில், கோவை சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் முதல்வர் விஜய் ஆறுதல் தெரிவித்து, 7 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கோவைசிறுமி கொலைதமிழ்நாடுநயினார் நாகேந்திரன்நிவாரணம்பாஜக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சிறைக்குள் முறைகேடு தடுக்கப்படும் – அமைச்சர் நிர்மல் குமார்
Next Article தனி சின்னத்தில் போட்டியிட மமக முடிவு: ஜவாஹிருல்லா விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று திட்டமிட்டபடி கரூர் மாவட்டத்திற்கு வருகை…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

You Might Also Like

இந்தியா

காவிரி ஆணைய கூட்டம்: மேகதாது அணை விவாதம் எதிர்பார்ப்பு

டெல்லியில் ஜூன் 23 அன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52வது கூட்டம் நடைபெறுகிறது. இதில் மேகதாது அணை விவகாரம் மற்றும் கர்நாடகாவின் நீர் பங்கீடு குறித்து விவாதிக்கப்படும்.

1 Min Read
அரசியல்

சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்பு, நீட் தேர்வு: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்!

சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்பு மற்றும் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை…

1 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஆளுநர் உரை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சபாநாயகர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு: உற்பத்தி பாதிப்பு

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வால் தமிழகத்தில் கட்டுமானப் பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடு கட்டும் செலவு அதிகரித்து பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?