MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இயல்பாக சிரித்ததை திரிப்பது வருத்தம் – அமைச்சர் கீர்த்தனா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - இயல்பாக சிரித்ததை திரிப்பது வருத்தம் – அமைச்சர் கீர்த்தனா

அரசியல்

இயல்பாக சிரித்ததை திரிப்பது வருத்தம் – அமைச்சர் கீர்த்தனா

Admin
Last updated: மே 24, 2026 6:56 மணி
Admin
Share
SHARE

தொழில்துறை தொடர்பான கூட்டத்திற்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, தான் இயல்பாக சிரித்ததை தவறாகப் புரிந்துகொண்டு, அரசியல் நோக்கத்துடன் திரித்து பரப்பப்படுவது மிகுந்த வருத்தமளிப்பதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், 'கேள்வி-பதில்கள் முடிந்த தருணத்தில் நான் இயல்பாக சிரித்தேன். அது எந்தக் கேள்விக்கும் அல்லது சம்பவத்திற்கும் எதிரான பிரதிபலிப்பல்ல. ஆனால் அந்த உடல் மொழியை தவறாகப் புரிந்து கொண்டு, அரசியல் நோக்கில் திரித்து பரப்பப்படுவது வருத்தம் அளிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரச் சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், இது தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 250க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான கார்த்தி மற்றும் மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.

ஒரு குழந்தைக்கான நீதியும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பும் தான் இந்த அரசின் முதல் முன்னுரிமை என அமைச்சர் வலியுறுத்தினார். இத்தகைய உணர்வுப்பூர்வமான சூழ்நிலையிலும் அடிப்படையற்ற விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தேவையற்ற ட்ரோலிங் நடைபெறுவது கவலைக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி ஆளும் கட்சியை விமர்சிப்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்; ஆனால் உண்மைகளை திரித்து, ஒருவரின் தனிப்பட்ட தருணங்களையே அரசியல் ஆயுதமாக மாற்றுவது சமூகத்திற்கு ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. தமிழ்நாடு அரசு மக்கள் பாதுகாப்பிலும், நீதியிலும் எந்த சமரசமும் செய்யாது என்றும் அமைச்சர் கீர்த்தனா தனது பதிவில் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதனிடையே, 'மேகேதாட்டு விவகாரத்தில் முதல்வர் விஜய் வாய் திறந்து பேசுவாரா?' என கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅமைச்சர் கீர்த்தனாதமிழ்நாடு அரசுபெண்கள் பாதுகாப்புபோக்சோ சட்டம்ஜோசப் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகல்
Next Article கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரஃப்தார்’ இந்தி பட ரிலீஸ் தேதி மாற்றம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று திட்டமிட்டபடி கரூர் மாவட்டத்திற்கு வருகை…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கர்நாடகாவைச் சேர்ந்தவரை நியமித்ததற்கு வேல்முருகன் எதிர்ப்பு

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டது குறித்து வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நியமனத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என…

1 Min Read
அரசியல்

மின் உற்பத்தியில் தன்னிறைவு: புதிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய புதிய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் இதற்கான நடவடிக்கைகள்…

2 Min Read
தமிழ்நாடு

பதவி வேண்டாம்: இபிஎஸ்-க்கு அதிமுக நிர்வாகிகள் கடிதம்

அதிமுகவில் உட்கட்சி பூசல்: எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி, தாங்கள் நியமித்த கட்சிப் பதவிகள் தங்களுக்கு வேண்டாம்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மாடர்ன் மனுநீதிச் சோழன் அரசு: தவெக பதிலடி

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என தவெக தனது ஐடி விங் மூலம் விளக்கம் அளித்துள்ளது. இது மாடர்ன் மனுநீதிச் சோழன்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?