MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 2028 ஒலிம்பிக்: தமிழக வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிமொழி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 2028 ஒலிம்பிக்: தமிழக வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிமொழி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - 2028 ஒலிம்பிக்: தமிழக வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிமொழி

அரசியல்

2028 ஒலிம்பிக்: தமிழக வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிமொழி

Admin
Last updated: மே 24, 2026 1:26 மணி
Admin
Share
SHARE

2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் பதக்கம் வெல்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வழங்கும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதியளித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களைச் சந்தித்த அமைச்சர், அவர்களின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக முதல்வர் பொறுப்பேற்றது முதல் தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வெல்வதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக எனது அலுவலக பணிகளை நாள்தோறும் காலை 7 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி, விளையாட்டுத் துறை அதிகாரிகள், வீரர்கள், சங்க நிர்வாகிகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். உங்களது தேவைகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தெரிவிக்கலாம்' என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் குழுப் போட்டிகளில் மட்டுமே பதக்கங்கள் பெற்றுள்ளனர். தனிநபர் பிரிவுகளில் இதுவரை பதக்கங்கள் எதுவும் இல்லை. இந்த நிலையை மாற்றி, வருங்காலங்களில் தனிநபர் பிரிவுகளிலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் பதக்கங்கள் வெல்லும் வகையில் தொலைநோக்கு செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்வதை நோக்கமாகக் கொண்டு, இதற்கென அரசு உயர் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் எனது கைபேசி எண்ணை உள்ளடக்கிய வாட்ஸாப் குழு உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்வது எவ்வளவு கடினமான முயற்சி என்பதை விளையாட்டு வீரர் என்ற முறையில் நான் அறிவேன். எனவே, விளையாட்டு அறிவியல் அடிப்படையிலான பயிற்சிகள், ஊட்டச்சத்து மிக்க உணவு, உயர்தர பயிற்சி முகாம்கள், உளவியல் நிபுணர்களின் ஆலோசனைகள், சிறந்த பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்கி, இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க விளையாட்டுத் துறை தயாராக உள்ளது. குறிப்பாக, வரும் ஒலிம்பிக் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டு முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஸ்குவாஷ் உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் 4 வீரர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரியது. இந்த உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த இலக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வெல்வதே ஆகும். அந்த வகையில் 2028-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்ல விளையாட்டு மேம்பாட்டுத் துறை தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் சஜ்ஜன்சிங் ரா சவான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ரெ. சுமன், பொது மேலாளர் எல். சுஜாதா, தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்க பொதுச் செயலாளர் சைரஸ் பூன்ச்சா, ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் அபய் சிங், பயிற்சியாளர் மற்றும் ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனைகள் உடனிருந்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:2028 OlympicsTamil Nadu Sportsஆதவ் அர்ஜுனாஒலிம்பிக்தமிழகம்விளையாட்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சி.பா.ஆதித்தனார் 45வது நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி
Next Article பழனி பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு உத்தரவு குறித்த செய்தி

அதிகாரிகளுக்கு ஒரு அரசு கார் மட்டுமே: மத்திய அரசு அதிரடி

மத்திய அரசு அதிரடி உத்தரவு: பல்வேறு துறைகளை கூடுதலாக கவனித்தாலும் ஒரு அதிகாரிக்கு…

ஜூலை 29, 2026

போராட்டக்காரர்கள் மீதான தடுப்பு நடவடிக்கைகள் இயல்பானதே – நட்டா

டெல்லியில் போராடிய மாணவர்கள் காவல்துறை நடவடிக்கைகளை எதிர்கொள்ள…

ஜூலை 29, 2026

ஜந்தர் மந்தர் போராட்டம்: நாட்டுக்கு அவப்பெயர் – பாபா ராம்தேவ் விமர்சனம்

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவர்கள் நாட்டுக்கு…

ஜூலை 29, 2026

மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி: நண்பகல் வரை ஒத்திவைப்பு

மக்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும்…

ஜூலை 29, 2026

மேகதாது அணை: மாநிலங்களவையில் காங்கிரஸ் நோட்டீஸ்

தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்க மேகதாது…

ஜூலை 29, 2026

You Might Also Like

அரசியல்

விசிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட புதிய சோஃபாக்கள் யாருக்காக?

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு…

1 Min Read
அரசியல்

நீட் தேர்வை ரத்து செய்: இளைஞர் காங்கிரஸ் ரயில் மறியல் போராட்டம்!

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து சென்னையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

2 Min Read
அரசியல்

கருத்து வேறுபாடுதான், பிளவு இல்லை – எஸ்.பி.வேலுமணி விளக்கம்

அதிமுகவில் தனியாக செயல்பட்டு வந்த எஸ்.பி.வேலுமணி அணி, மீண்டும் பழனிசாமி அணியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்.பி.வேலுமணி கூறுகையில், 'எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தானே தவிர, பிளவு…

1 Min Read
சசிகலா அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடும் காட்சி
அரசியல்

சசிகலா மீண்டும் ஆக்டிவ்: எடப்பாடிக்கு அதிர்ச்சி!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல அணிகளாகப் பிரிந்து பலமிழந்த அதிமுகவில், சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். இது எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?