MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்: உட் கட்சி பூசலால் வேதனை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்: உட் கட்சி பூசலால் வேதனை!
அரசியல்

அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்: உட் கட்சி பூசலால் வேதனை!

Admin
Last updated: May 18, 2026 3:01 pm
Admin
Share
SHARE

சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேர்தலுக்குப் பிறகு கட்சியில் நடக்கும் நிகழ்வுகள் மிகுந்த மன வேதனையை அளிப்பதாகவும், லட்சக்கணக்கான தொண்டர்களும் இதே மனநிலையில்தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா காத்த இந்த இயக்கம் இப்படி பலவீனமடைந்து விட்டதை எண்ணி வேதனைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா! நோகுதய்யா; மனசு நோகுதய்யா" என்ற வரிகள் மூலம் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் செம்மலை. உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுவதாக ஆங்கில நாளிதழ்கள் விமர்சிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தனக்கு வழங்கிய வாய்ப்புகளுக்கும், அரசியல் அங்கீகாரத்திற்கும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும், அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும், தடுக்கப்பட்டதாகவும், ஆனாலும் தலைமைக்கு கட்டுப்பட்டு பணியாற்றி வந்ததாகவும் செம்மலை தெரிவித்துள்ளார். மறைந்த தலைவர்களுடன் அரசியலில் பயணித்ததை எண்ணிப் பார்க்கும்போது, தற்போதுள்ள சூழ்நிலையில் கட்சியில் தொடர்ந்து பயணிக்க மனம் இடம் தரவில்லை என்றும், இதனால் கனத்த இதயத்துடன் தனது பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகுவதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலுக்குப் பிறகு கட்சியில் நடக்கும் நிகழ்வுகள் மன வேதனையை அளிப்பதாகவும், அவை திருப்தி அளிக்கவில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தினார். கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தலைவர்களிடம் இருக்க வேண்டும் என்றும், நிர்வாகிகளுக்கு இடையே உள்ள 'ஈகோ' தான் கட்சியின் வளர்ச்சியை தடுக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். அதிமுகவை திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்றும், இதற்கு கட்சியை வலுவான இயக்கமாக காட்டத் தவறியதே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். பொதுச்செயலாளர் பழனிசாமி தேர்தலின் போது கடுமையாக உழைத்ததாகவும், உட்கட்சி பூசல் காரணமாகவே வெற்றி பெற முடியவில்லை என்றும் கூறிய அவர், எஸ்.பி.வேலுமணியின் பின்னால் பாஜக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை ஏற்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:AIADMKTamil Nadu Politicsஅதிமுகஅரசியல்செம்மலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article யுஏஇ அணுமின் நிலையம் மீது டிரோன் தாக்குதல் – இந்தியா கண்டனம்!
Next Article தோனி 2027ல் ஓய்வு? அஸ்வின் சொன்ன முக்கிய தகவல்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சரிந்து வரும் சாம்ராஜ்யத்தை காப்பாற்ற தவெக மீது பழி: எடப்பாடிக்கு பதிலடி

அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்கு மத்தியில், அக்கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்தனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் முன்வைத்த நிலையில், தவெக பதிலடி கொடுத்துள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

முதல்வர் பதவிக்கு பேரம்? திருமாவளவன் பகீர் பேட்டி!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, முதலமைச்சர் பதவி தொடர்பாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
அரசியல்

வெளிநாட்டு வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் விசாரணை – திமுக எம்பி தகவல்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. திமுக எம்பி வில்சன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

1 Min Read
அரசியல்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 4-க்கு தள்ளிவைப்பு!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 1-ல் இருந்து ஜூன் 4-க்கு மாற்றப்பட்டுள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே நாளில் பள்ளிகள் திறக்கப்படும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?