MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தேர்வுக்கு முன்பே கசிந்த 135 நீட் தேர்வு வினாக்கள்.. ராஜஸ்தானில் சிக்கிய மாதிரி வினாத்தாள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - தேர்வுக்கு முன்பே கசிந்த 135 நீட் தேர்வு வினாக்கள்.. ராஜஸ்தானில் சிக்கிய மாதிரி வினாத்தாள்!

இந்தியா

தேர்வுக்கு முன்பே கசிந்த 135 நீட் தேர்வு வினாக்கள்.. ராஜஸ்தானில் சிக்கிய மாதிரி வினாத்தாள்!

Admin
Last updated: மே 11, 2026 7:53 மணி
Admin
Share
SHARE

தேசிய தேர்வு முகாமையால் நடத்தப்படும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3 அன்று நடைபெற்று முடிந்தது. இதில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு வினாக்கள் கசிந்துள்ள பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

மே 1ஆம் தேதியே ராஜஸ்தானின் சிகார் பகுதியில் இந்த வினாத்தாள் சுழற்சிக்கு வந்துள்ளது. இது மாணவர்களிடம் 20,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கையால் எழுதப்பட்ட இந்த மாதிரி வினாத்தாள் பிரதியில் மொத்தம் 281 கேள்விகள் இருந்தன. மே 3 அன்று நடந்த அசல் நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 135 கேள்விகள் இந்த மாதிரி தாளில் இருந்தவற்றுடன் அப்படியே ஒத்துப்போகின்றன.

90 உயிரியல் கேள்விகளும், 45 வேதியியல் கேள்விகளும் அப்படியே அதில் இடம்பெற்றிருந்தன.

இவ்வாறு மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில், 600 மதிப்பெண்களுக்கான கேள்விகள் தேர்வுக்கு முன்னரே கசிந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராஜஸ்தான் போலீசார் இந்த மாதிரி தாளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த முறைகேட்டின் பின்னணியில் கேரளாவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் பயிலும், ராஜஸ்தான் மாநிலம் சூருவைச் சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவர் ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாகப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அவர்தான் மே 1 அன்று சிகாரில் உள்ள தனது நண்பருக்கு இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அங்கிருந்து விடுதிகள் மற்றும் பயிற்சி மையங்கள் வழியாக இது காட்டுத்தீயாகப் பரவியுள்ளது.

மேலும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் இந்த வினாத்தாள் பலமுறை பகிரப்பட்டுள்ளது. இது மிக அதிக அளவிலான மாணவர்களுக்குத் தேர்வுக்கு முன்னரே சென்றடைந்திருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய தேர்வு முகமை, தேர்வு முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகுதான் முறைகேடு குறித்த தகவல் தங்களுக்குக் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளது.

விசாரணை அமைப்புகளின் ஆதாரங்களின் அடிப்படையில், வெளிப்படையான முறையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

இது நீட் தேர்வின் தரவரிசைப் பட்டியலிலும், மருத்துவச் சேர்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘அரசியலில் புதிய பண்பாட்டை துவக்கி வைத்துள்ள முதல்-அமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகள்’ – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
Next Article “முதல்வர் விஜய்க்கு நான் ஜால்ரா போடவில்லை” – இயக்குநர் சேரன் விவரிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

முதல்-அமைச்சர் விஜய்க்கு கரூர் செல்ல தடையில்லை: சுப்ரீம் கோர்ட்

முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம்…

ஜூலை 7, 2026

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

You Might Also Like

இந்தியா

பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: மத்திய அரசின் அறிவிப்பு

மத்திய அரசு பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் இந்த உயர்வு, சாதாரண மற்றும் தட்கல் பாஸ்போர்ட்கள் இரண்டையும் பாதிக்கிறது.

1 Min Read
இந்தியா

செங்கோட்டை குண்டுவெடிப்பு: AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல்

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் AI தொழில்நுட்பத்தை தீவிரவாதிகள் பயன்படுத்தியிருப்பது NIA விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 7,500 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1 Min Read
இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: பேருந்தில் பெண்ணுக்கு கொடூர பாலியல் வன்கொடுமை!

டெல்லியில் பேருந்தில் வைத்து மூன்று குழந்தைகளின் தாயான பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுநர், நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
இந்தியா

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் ஒதுக்க மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஒப்புதல்

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்யவும், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியைத்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?