MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வயநாடு நிலச்சரிவு: காணாமல் போன 5 பேரை தீவிரமாக தேடும் பணி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வயநாடு நிலச்சரிவு: காணாமல் போன 5 பேரை தீவிரமாக தேடும் பணி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - வயநாடு நிலச்சரிவு: காணாமல் போன 5 பேரை தீவிரமாக தேடும் பணி

இந்தியா

வயநாடு நிலச்சரிவு: காணாமல் போன 5 பேரை தீவிரமாக தேடும் பணி

Fernandez
Last updated: ஜூலை 9, 2026 8:00 காலை
Fernandez
Share
வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணியில் ஈடுபடும் மீட்புப் படையினர்
வயநாடு நிலச்சரிவு: காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரம்
SHARE

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம், மேப்பாடி அருகே கல்லாடி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் கல்லாடி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் வடமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம், சுரங்கப்பாதை நுழைவுவாயில் அருகே 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு, மலைப்பகுதியிலிருந்து நீரோடு மண்ணும் கீழ்நோக்கி அடித்து வரப்பட்டது. மேலும், அப்பகுதியில் இருந்த சாலை மற்றும் பாலத்தையும் மண் மூடியது.

இந்த நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு, மேப்பாடியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வயநாடு போலீஸார் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இரவு நேரம் மற்றும் கனமழை காரணமாக முந்தைய நாள் இரவு மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், நேற்று 2-வது நாளாக காணாமல் போன 5 பேரைத் தேடும் பணி தொடர்ந்தது. சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனத்தின் மேலாளர் விக்ரம் ராணா (இமாச்சல பிரதேசம்), என்ஜினீயர் ராகுல், ஆபரேட்டர் முகமது இம்ரான் (பீகார்), சர்வேயர் ராகேஷ் குஜத் (மேற்கு வங்கம்), சர்வேயர் அஸ்ஹருதீன் அன்சாரி (உத்தர பிரதேசம்) ஆகிய 5 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை.

உயிரிழந்த 5 பேரில், தனியார் நிறுவனத்தின் ஆபரேட்டர் சந்திரபான் (மத்திய பிரதேசம்), போர்மேன் பிகாஷ் குமார், தொழிலாளி அன் சந்திரா பான் (ஜார்க்கண்ட்) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு, கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடல்கள் பின்னர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 4 பிரிவுகளாக மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சினிபர் மற்றும் கடாவர் வகையைச் சேர்ந்த 2 மோப்ப நாய்களின் உதவியுடன் மண்ணுக்குள் புதைந்தவர்களைத் தேடி வருகின்றனர். சுரங்கப்பாதை நுழைவுவாயில் பகுதியிலிருந்து சுமார் 200 மீட்டர் சுற்றளவில் 7 முதல் 10 அடி உயரம் வரை மண் குவிந்துள்ளது.

இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள வசித்து வந்த 33 குடும்பங்களைச் சேர்ந்த 93 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:LandslideRescue OperationWayanadகேரளசுரங்கப்பாதைநிலச்சரிவுமீட்பு பணிவயநாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சி செய்யும் காட்சி இந்தியா vs இங்கிலாந்து 4வது டி20: திலக் வர்மாவுக்கு கடைசி வாய்ப்பா?
Next Article 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை: 09-07-2026 ராசி பலன்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்தோனேசியாவில் உள்ள பழமையான இந்து கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு

இந்தோனேசியாவில் 1000 ஆண்டுகள் பழமையான கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

இந்தோனேசியாவில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான இந்து கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி…

ஜூலை 9, 2026

காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதி சுட்டுக்கொலை: உடல் மீட்பு

தெற்கு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினருடன்…

ஜூலை 9, 2026

நீட் தேர்வு சர்ச்சை: நெட் சமூகவியல் வினாத்தாள் கசிந்ததாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் ஓய்வதற்குள்,…

ஜூலை 9, 2026

தமிழக விவசாயிகளிடமிருந்து கொப்பரை, மாம்பழங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்

தமிழக விவசாயிகளிடமிருந்து கொப்பரை தேங்காய் மற்றும் தோதாபுரி…

ஜூலை 9, 2026

வயநாடு நிலச்சரிவு: காணாமல் போன 5 பேரை தீவிரமாக தேடும் பணி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே…

ஜூலை 9, 2026

You Might Also Like

உத்தர பிரதேசம் சுங்கச்சாவடியில் ஏற்பட்ட தீ விபத்து காட்சி
இந்தியா

உ.பி.யில் சுங்கச்சாவடியில் பயங்கர தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் சுங்கச்சாவடி மீது கியாஸ் டேங்கர் லாரி மோதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 16 இருசக்கர வாகனங்கள், 2…

1 Min Read
இந்தியா

கிணற்றில் விழுந்த காட்டு யானையை மீட்ட வனத்துறையினர்

உணவு தேடி தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று, கிணற்றில் தவறி விழுந்த நிலையில், வனத்துறையினர் போராடி அதை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 Min Read
இந்தியா

மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு!

மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 23 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 Min Read
இந்தியா

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: மம்தா பானர்ஜி அழைப்பு

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ரவீந்​திர​நாத் தாகூரின் பிறந்த தினத்தை ஒட்டி கொல்​கத்​தா​வில் நேற்று நடந்த நிகழ்ச்​சி​யில் முன்னாள் முதல்வர்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?