விருத்தாசலம் அருகே பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. கனமழையில் இருந்து தப்பிக்க தண்டவாளத்தில் தஞ்சமடைந்த 70-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் மீது அதிவேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆடுகள் அனைத்தும் சதை சதையாக சிதறி பரிதாபமாக உயிரிழந்தன.
இந்த துயர சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மழையில் இருந்து தப்பிக்க ஆடுகள் எப்படி தண்டவாளத்திற்குள் வந்தன என்பது குறித்தும், ஆடுகளின் உரிமையாளர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
விருத்தாசலம் – சேலம் இடையேயான ரயில் பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தண்டவாளத்தில் படுத்திருந்த ஆடுகள் மீது ரயில் மோதியதில், ஆடுகளின் உடல்கள் சிதறி கிடந்தன. இந்த காட்சி காண்போரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.
இந்த எதிர்பாராத ரயில் விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.