இந்திய தேர்தல் ஆணையத்தின் மூன்றாம் கட்ட எஸ்ஐஆர் (SIR) பணி மூலம் நாடு முழுவதும் சுமார் 1.5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி, ஒடிசா, மிசோரம், சிக்கிம், மணிப்பூர், உத்தராகண்ட், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஹரியானா, சண்டிகர், தெலங்கானா, பஞ்சாப், கர்நாடகா, மேகாலயா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், நாகலாந்து, திரிபுரா, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டையூ மற்றும் டாமன் ஆகிய 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இந்த எஸ்ஐஆர் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை 12 மாநிலங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த 12 மாநிலங்களில் மொத்தம் 13,77,27,807 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், அவர்களில் வசிப்பிடத்தை மாற்றியவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், உயிரிழந்தவர்கள் போன்ற காரணங்களுக்காக சுமார் 1,58,59,834 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது மொத்த வாக்காளர்களில் சுமார் 11.51 சதவீதமாகும்.
வாக்காளர் நீக்கத்தில் அதிகபட்ச சதவீதத்தை தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டையூ மற்றும் டாமன் பகுதி பதிவு செய்துள்ளது. இங்கு சுமார் 29.64 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்தில் 19.09 சதவீதமும், ஹரியானாவில் 16.38 சதவீதமும், ஜார்கண்டில் 16.48 சதவீதமும் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சத்தீஸ்கரில் 12.8%, உத்தராகண்டில் 10.39%, சண்டிகரில் 12.8%, மேகாலயாவில் 7.67%, மணிப்பூரில் 7.5%, மிசோரமில் 5.2% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மாநில வாரியாகப் பார்க்கும்போது, ஆந்திர மாநிலத்தில் 44.89 லட்சம் வாக்காளர்கள், ஹரியானாவில் 33.83 லட்சம் வாக்காளர்கள், ஒடிசாவில் 20.12 லட்சம் வாக்காளர்கள், சிக்கிமில் 37,724 வாக்காளர்கள் எனப் பெரிய அளவில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சில நீதிமன்ற வழக்குகளைத் தொடுத்துள்ளன. இருப்பினும், கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் பணியை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரமைப்புப் பணிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எஸ்ஐஆர் பணி மூலம் வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்குவதன் மூலம் வாக்காளர் பட்டியலை துல்லியமாக பராமரிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் நேர்மையான தேர்தலை உறுதி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் இந்த பணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
