இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க முதலமைச்சர் விஜய் கோரிக்கை

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதும் முதலமைச்சர் விஜய்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் 9 பேர் மற்றும் அவர்களது மீன்பிடி படகை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில், கடந்த ஆகஸ்ட் 12, 2026 அன்று இரவு, IND-TN-10-MM-329 என்ற பதிவு எண்ணைக் கொண்ட மீன்பிடி இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் தனிப்பட்ட கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாக தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இது போன்ற இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது மிகுந்த கவலையையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாகவும், இதுவரை 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்து, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் விரைவாக விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாகத் தாய்நாடு திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால், தாங்கள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பது, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கும், தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினருக்கும் பெரும் நம்பிக்கையையும் நிம்மதியையும் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் உடனடித் தலையீட்டை எதிர்பார்ப்பதாகவும் முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version