தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து காப்பாற்றுவது என்பது விடுதலைக்கு நிகரானது என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக்கொடியை ஏற்றிய பின்னர் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 'சமூக நீதி அடிப்படையிலான வெளிப்படையான மற்றும் உண்மையான நிர்வாகத்தை நாங்கள் செயல்படுத்துகிறோம். பொதுவாழ்வில் சமரசம் என்பதே இருக்கக் கூடாது. மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு தவெக செயல்படுகிறது. தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து விடுவிப்பது என்பது ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு ஒப்பானது' என்று குறிப்பிட்டார்.
மேலும், அனைத்து துறைகளிலும் லஞ்சம் மற்றும் ஊழலை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். காவல் நிலையங்களும் இனி மக்களுக்கான சேவை மையங்களாக மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஊழலற்ற தமிழகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டே தனது அரசு செயல்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் விஜய் உறுதியளித்தார்.
