பேசுங்கள் என்று பலர் வலியுறுத்துகிறார்கள், ஆனால் நான் பேசத் தொடங்கினால் அனைவரும் வெளியேறிவிடுகிறார்கள். 'பார்ட்டி ஃபண்ட்' என்றதும் சட்டப்பேரவையிலிருந்தே ஓடிவிட்டார்கள் என முதலமைச்சர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 'வேட்டைக்காரன்' பாடலைப் பாடி உரையாற்றிய முதல்வர் விஜய், 'பேசுங்கள், பேசுங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் பேச ஆரம்பித்தால் அனைவரும் வெளியே சென்றுவிடுகிறார்கள். 'பார்ட்டி ஃபண்ட்' என்று சொன்னவுடன் சட்டப்பேரவையிலிருந்தே ஓடிவிட்டார்கள். வெறும் 5 நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள்' என்று குறிப்பிட்டார்.
'டாக் லெஸ், வொர்க் மோர்' என்பதே எங்கள் அரசியல் தாரக மந்திரம். 'பேச்சை குறை, வேலையை செய்' இதுவே எங்கள் கொள்கை. உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், கொடுக்க முடியாது எனத் தைரியமாகச் சொல்லுங்கள். நான் இருக்கிறேன். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பைசா லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் வேலைகள் 'டக் டக்' என நடக்கிறது. அரசு அலுவலகங்களில் மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்கிறது. ஊழல், லஞ்சம் இல்லை என மக்கள் கூறியதை கேட்கும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தற்போது யார் யாருடைய கதவுகளைத் தட்டிக்கொண்டு நிற்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறு வேறல்ல. அவர்கள் கூட்டுக் களவாணிகள். எங்களுக்குள் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பதை அவர்களால் நிரூபிக்க முடியுமா? இடைத் தேர்தலில் அதை நிரூபிக்கட்டும், பிறகு பேசலாம்.
'கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை, ஓடிக்கொண்டே இருக்கிறார். இன்னொருவர் வெளிநாட்டில் செக்கப்-க்கு போயிருக்கிறார்' என்று அவர் கூறினார்.
நாங்கள் வாஷிங் மெஷின் அல்ல. திமுகதான் வெண்டிங் மெஷின். அரசியல் வியாபாரத்திற்கான வெண்டிங் மெஷினாக திமுக செயல்படுகிறது. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை உடைத்தெறிந்தது தவெக. அறிஞர் அண்ணா பிறந்தநாளில் உங்கள் அண்ணனுடைய ஆட்சியில் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' அறிவிக்கப்படும். இந்த விஜய், தீயசக்தி போன்ற ரீல் தாய்மாமன் அல்ல, உண்மையான தாய்மாமன்' என்று அவர் தெரிவித்தார்.

