நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் சென்சார் சிக்கல்கள் காரணமாக வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 3ஆம் தேதி இணையதளத்தில் சட்டவிரோதமாக கசிந்தது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முக்கிய குற்றவாளி உட்பட 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் தாக்கல் செய்த ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும், இந்த படக் கசிவில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தொழில்நுட்ப தகவல் மற்றும் உளவுத்துறையின் உதவியுடன், குற்றப்பிரிவு போலீசார் அந்த முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர். மேலும், படம் வெளியானது தொடர்பாக மற்றொரு குற்றவாளியையும் கைது செய்துள்ளனர். இதனால், இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் குறித்த விரிவான தகவல்கள் எதுவும் காவல்துறையால் வெளியிடப்படவில்லை. இணையதளத்தில் சட்டவிரோதமாக திரைப்படம் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் கசிவு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை, இது போன்ற சட்டவிரோத செயல்களுக்கு ஒரு பாடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
