அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது இரண்டு நாள் சீனப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பினார். அவருடன் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில், எலான் மஸ்க், ஆப்பிள் சிஇஓ டிம் குக், என்வீடியா சிப் நிறுவன தலைவர் ஜென்சன் ஹூவாங் உள்ளிட்ட முக்கிய வணிகப் பிரமுகர்களும் திரும்பினர். இந்த பயணத்தின்போது, சீன அதிகாரிகளால் அதிபர் டிரம்ப் மற்றும் பிற விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீஜிங் விமான நிலையத்தில், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் தங்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து சீனப் பரிசுப் பொருட்களையும் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பின்னால் தீவிரமான பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அச்சம் இருப்பதாக கூறப்படுகிறது. சீன அதிகாரிகள் வழங்கிய பரிசுப் பொருட்களில் 'ஸ்பைவேர்' எனப்படும் உளவு மென்பொருட்கள், கண்காணிப்பு சிப்கள் அல்லது ஹேக்கிங் செய்யக்கூடிய பிற தொழில்நுட்பங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த சம்பவம், அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளில் ஒரு புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குழுவினரின் இந்த செயல், இரு நாடுகளுக்கிடையேயான நம்பிக்கையின்மையையும், பாதுகாப்பு குறித்த கவலைகளையும் மேலும் அதிகரித்துள்ளது.