முதலமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் பகிரங்க சவால்!

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சருக்கு வெளிப்படையாக சவால் விடுகிறேன். முதலமைச்சர் மேசையில் உள்ள கோப்புகளை அவர் விரைந்து வெளியிடட்டும். ஆதாரம் இருந்தால் யார் மீது தவறு இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். இந்த உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் சிறப்பாக வழி நடத்தி வருவதாகவும், ஆளுங்கட்சியினர் ஆதாரமில்லாமல் பல குற்றச்சாட்டுகளை வைப்பதை உடனடியாக நீக்கி விடுவதாகவும் தெரிவித்தார். மேலும், கேள்வி கேட்டால் நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பதில் சொல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 19) முதலமைச்சர் பேசியபோது, தனது மேஜையில் கோப்புகள் இருப்பதாகக் கூறி, எதிர்க்கட்சி அரசை குற்றஞ்சாட்டும் நோக்கில் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார். தயவுசெய்து அந்த கோப்புகளை திறந்து பார்க்க வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எதற்காக பயப்படுகிறீர்கள் என்ற வசனத்தையும் முதலமைச்சர் கூறியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

திமுக ஆட்சியில்தான் சட்டமன்ற நிகழ்வுகள் முதன்முதலில் நேரலை செய்யப்பட்டதாகவும், கேள்வி – பதில் நேரத்தை முதன்முதலில் நேரலை செய்ததும் திமுக ஆட்சியில்தான் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், தற்போது கேள்வி – பதில் விவாதமே நடத்த முடியாத சூழல் நிலவுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

அனைத்து நிகழ்ச்சிகளையும் நேரலை செய்வதால் என்ன பிரச்சினை வருகிறது என்பதை நாங்கள் கூறி வருகிறோம். அவைக்குறிப்பில் இருந்து ஒரு வார்த்தை நீக்கப்படுவதற்கு முன்பாகவே அது நேரலையில் சென்றுவிடுகிறது. சபாநாயகர் அவைக்குறிப்பில் நீக்கும் வார்த்தையை முழுமையாக நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எல்லா நிகழ்ச்சிகளையும் நேரலை செய்கிறீர்கள். அவைக் குறிப்பில் இருந்து நீக்குவது எல்லாம் ரீல்ஸாக வெளியில் செல்கிறது. இதைத்தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியபோது, அதற்கு பதிலளித்த சபாநாயகர், நீக்கப்பட்ட வாதங்களை குறிப்பிடும் மீடியாக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த சவால்கள் மற்றும் விவாதங்கள் சட்டமன்ற நடவடிக்கைகளில் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் முன்வைக்கும் கோரிக்கைகள் மற்றும் சவால்களுக்கு முதலமைச்சர் தரப்பிலிருந்து என்ன பதில் வரும் என்பதை அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version